Thursday, May 24, 2012

பொறியியல் கல்வி-வழிகாட்டல்


என்ன படிக்கலாம்?,எங்கு படிக்கலாம்?-(கல்வி சந்தை ஒரு அலசல்)

 +2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன என்ன படிப்பு படிக்கலாம்,எந்த கல்லூரியில் படிக்கலாம் போன்ற அலசல்கள் மாணவர்களிடையே அதிகம் அலைமோதும் நேரம் இது... தேர்வு முடிவுகள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களை அதிகமாகவே பாதித்து விடுகிறது, தன் பிள்ளை அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறான்  (அ) வாங்கியிருக்கிறாள்,என்று சொல்லிக்கொள்வது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கிறது...மதிப்பெண் குறைவை அவர்கள் கௌரவ குறைச்சலாக கருதுகிறார்கள்.சமீப காலமாக மக்களிடையே இந்த எண்ண ஓட்டம் அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்:

  பெரும்பான்மையான மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவம் மற்றும் பொறியயல் படிப்பை மட்டுமே சிறந்த படிப்புகளாக கருதுகிறார்கள்.இவை அதிகம் சம்பாதிக்க துணை செய்யும் படிப்புகள் என்கிற மோகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
மருத்துவப்படிப்பிற்கான "கட்-ஆப்" மதிப்பெண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் (mere 1,653 (excluding 635 additional seats surrendered by self-financing colleges)  
மருத்துவத்துறையை நாடும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மெயின்டைன் செய்கிறது.



            மெடிக்கல் கட்-ஆப் ஒரு ஒப்பீடு: நன்றி THE HINDU

பொறியியல் படிப்பில் சேர தகுதிகள் அதிகம் தேவைப்படுவதில்லை,பன்னிரென்டாம் வகுப்பு தேர்வாகி இருந்தால் மட்டும் போதும் கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தால் பணம் கொடுத்து சீட் வாங்கி விட முடியும்,என்ஜினியரிங்க் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம்.ஆக என்ஜினீயரிங்க் துறையை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

ற்போது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துவிட்டன


பொறியியல் படிப்பின் தற்போதைய நிலை:

ண்மையான ஆர்வம் காரணமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களை விட ஆர்வக்கோளாராக,தெளிவான சிந்தனையின்றி பொறியியலை நாடும் மாணவர்கள் அதிகம்,இது மட்டுமில்லாமல் சில மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்த போதிலும் அவர்களின் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இந்த படிப்பில்ல் வந்து மாட்டிக்கொள்ளும் மாணவர்களும் அதிகம்.(எங்கள் கல்லூரியிலேயே இது போன்ற நன்பர்களை நான் சந்தித்து இருக்கிறேன்).
ப்படி ஆர்வமில்லாமல் ஒரு படிப்பில் நுழையும் போது அந்த படிப்பில் பிடிப்பு இல்லாமல் போகிறது,பாடங்களை படிக்க முடியாமல்,புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் திணருகிறார்கள்,மன அழுத்தம் அதிகரித்து படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே கை விடுகிறார்கள்.சில மாணவர்கள் தற்கொலை வரை கூட செல்லத்துணிகிறார்கள்.

 1997 ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

மிழகத்தில் உள்ள அத்தனை கல்லூரிகளும் சிறந்த கல்லூரிகள் என்று கூறி விட முடியாது.சரியான அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட பல கல்லூரிகள் தங்களை சிறந்த கல்லூரிகள் என்று மார்தட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கின்றன.


                              படம்:நன்றி:ஜூ.வி

ல கல்லூரிகள் தகுதி குறைவான ஆசிரியர்களை நியமித்துக்கொண்டு தன் கல்லூரிகளில் பாடம் கற்பித்து வருகின்றன,தகுதி குறைவான ஆசிரியர்கள் அதிக சம்பலம் எதிர்பார்பதில்லை இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் கனிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் பெரும்பான்பை கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் வாழ்வில் விளையாடுகின்றன.
ஆண்டுதோறும் நாடுமுழுவதும், 15 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும், 2.25 லட்சமாக உள்ளது.இதில் வேலைக்கு தகுதியானவர்கள் 10 முதல் 14 % மட்டுமே என்கிறது ஓர் ஆய்வு. 

 "மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். படிப்பை நிறைவு செய்யாமலும், வேலை கிடைக்காதவர்களும், மீதமுள்ள 20 சதவீதத்தினர்'' என்கிறார், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
 
டிப்பை தேர்வு செய்யும் முன்னர் இந்த படிப்பு நமக்கு ஏற்றதுதானா?? என்று ஒருமுறை சிந்தியுங்கள்,சிந்திக்க முடியாத பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவுங்கள்,என்ஜினியரிங்க் மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகள் மட்டுமே நல்லது என்கிற மோகத்திலிருந்து மீண்டு மாணவர்கள் தங்களின் தகுதி,திறமை,ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.என் ஜினியரிங்க் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தயவு செய்து தாங்கள் தேர்வு செய்யும் துறை சார்ந்த தகவல்கள்,தாங்கள் தேர்வு செய்யப்போகும் கல்லூரியி தரம் போன்றவற்றை தீர்க்க்மாக ஆராய்ந்து விட்டு தேர்வு செய்யவும்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம்.

புள்ளி விவர உபயம்:
THEHINDU


 

Post Comment

அழகுத்தமிழில் ஜிமெயில்


ஜிமெயில் ரகசியங்கள்- 9

 ஜிமெயில் சேவை அதன் பயனாளர்களுக்கு பல நல்ல விசயங்களை வழங்குவதில் புகழ்பெற்றது,அந்த வரிசையில் அதன் சேவையை பிராந்திய மொழியில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அது வழங்கி உள்ளது.அந்த மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று,இது பலருக்கு பழைய தகவலாக இருக்கலாம் ஆனால் பலர் இது பற்றி அறியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கானதே இந்த பதிவு.

ஜிமெயில் வசதியை தமிழில் ஏன் மாற்ற வேண்டும்:

ங்கிலம் அதிகம் தெரியாத நபர்களுக்கு இது ஏற்றது,அப்படிப்பட்ட நபர்கள் நமக்கு தெரிந்தவர்களில் இருந்தால்,அவர்களுக்கு ஜிமெயில் வசதி தமிழில் கிடைப்பதை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு மெயில் பற்றி கற்றுக்கொடுக்கலாம்...

படி:1 Settings Tab ஐ க்ளிக் செய்யவும்



படி:2 General பகுதியில் "Gmail display language" என்பதில் ஆங்கில மொழி தேர்வாகி இருக்கும்.அதில் "தமிழ்" தேர்வு செய்யவும்.


படி-3: பிறகு கீழ் பகுதியில் உள்ள Save changes பட்டனை க்ளிக் செய்து தங்கள் செட்டிங்க்ஸை சேவ் செய்யவும்.தற்போது ஜிமெயில் சேவை தங்களுக்கு தமிழில் தன் சேவையை வழங்கும்....


வாசகர்களின் வாக்குகள்,கருத்துக்கள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

 

Post Comment

Thursday, May 10, 2012

நாம் எழுதிய பதிவு திருட்டு போயிருக்கிறதா என கண்டறிவது எப்படி?


பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-3)

 திவு திருட்டுப் பற்றி கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம்,நாம் எழுதியிருக்கும் பதிவு திருட்டு போய் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்..

பதிவு திருட்டை கண்டுபிடிப்பது எப்படி?
   தை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது, (பல இணையதளங்கள் உள்ளன). நம்பகமான,அதே சமயம் எளிதான வழிகளை மட்டும் இவ்விடத்தில் கூறுகிறேன். தலைப்புகளில் குறிப்பிட்ட இணையத் தளத்தின் முகவரிக்கு லிங்க் கொடுத்துளேன்.குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல தலைப்பை க்ளிக் செய்யவும்.

 திவு திருடர்கள் உங்கள் பதிவை திருடியிருந்தால்
அதை மக்களின் பார்வைக்கு இணையதளத்தில் (internet) வைத்திருந்தால்... கூகுளிடமிருந்து அவரால் தப்ப முடியாது.இணையத்தின் எந்த மூலையில் எது ஒளிந்திருந்தாலும் பெரும்பாலும் கூகுள் நமக்கு தேடித்தரும். உங்கள் பதிவின் தலைப்பை கொடுத்து தேடிப்பாருங்கள்,அல்லது பதிவில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் பிரத்யேக வார்த்தைகளை (Key-Words) கொடுத்து தேடிப்பாருங்கள்.

 இது ஒரு அருமையான தளம்.நாம் தேடவேண்டிய பதிவின் முகவரியை அளித்தால் இணையத்தில் அது வேறு எங்காவது காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என தேடி விரைவாக நம்மிடம் சொல்லும்.இது இலவச சேவைதான் ஆனால் premium சேவையையும் Copy scape தளம் வளங்குகிறது.

 இதுவும் Copyscape தளத்தினைப்போலவே செயல்படுகிறது.ஆனால் இது இலவச,முடிவிலா சேவையை தருகிறது (free, unlimited service). Plagium தளம் யாகூ சேர்ச் எஞ்சினை பயன்படுத்தி இயங்குகிறது. எனவே இதன் தேடல் முடிவுகள் வித்தியாசமானவையாக கிடைக்கும். Copyscape மற்றும் Google சேர்ச் முடிவுகளை காட்டிலும் Plagium தேடித்தரும் விசயங்கள் மாறுபட்டவையாக இருக்கும்.

 உங்கள் பதிவுகள் திருடுபோவதை கண்டறிவதை அட்டோமேட் செய்ய நீங்கள் கூகுள் அலெர்ட்ஸ் ஐ பயன்படுத்தலாம்.இதன் மூலம்உங்கள் பதிவுகள் இணையத்தில் திருடுபோய் இருக்கிறதா?? என்று தேடச்சொல்லி தேடல் முடிவுகளை உங்களுக்கு இமெயில் அனுப்புமாறு செய்ய முடியும்.இது இலவச சேவை.

 RSS FEED வழியாக நம் பதிவு காப்பி அடிக்கப்படுவதை (RSS scraping)கண்டுபிடிக்க FAIRSHARE தளம் நமக்கு உதவுகிறது.அது மட்டுமில்லாமல் நம் பதிவுகள் காப்பி பேஸ்ட் செய்யப்படுவதையும் இத்தளம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.இதுவும் இலவச சேவையே.

 இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகிக்கொண்டு,அவர்கள் தருகிற Java Script ஐ நம் பிலாக்கில் நிறுவிக் கொள்ளவேண்டும். நம் பிளாகில் யாராவது  காப்பி செய்தால், எந்த பகுதி காப்பி செய்யப்பட்டது,எப்போது செய்யப்பட்டது.போன்ற தகவல்களை இந்த தளம் இலவசமாக Trace செய்து நமக்கு தெரிவிக்கும். 

  நாம் பதிவுகளில் பயன்படுத்தும் படங்களுக்கு தனிப்பெயர் கொடுக்க வேண்டும், பதிவை திருடுபவர்கள் படங்களின் பெயர்களை பெரும்பாலும் மாற்றுவதில்லை,அப்படி அவர்கள் மாற்றினால் அவை சில சிக்கல்களை தரும்.கூகுள் இமேஜ் செர்ச்"சில் நம் பதிவுகளில் பயன்படுத்தியிருக்கும் படங்களின் தலைப்புகளை கொடுத்து தேடலாம்.அல்லது நாம் பயன்படுத்தியிருக்கும் படங்களை கொடுத்தும் தேடலாம்.
கூகுள் இமேஜ் சர்ச் போலவே செயல்படும் இன்னொரு தளம் Tineye.

திருட்டுப்போன என் பதிவுகள்:
ன் பதிவுகளில் முதலில் திருட்டுப்போனது  பதிவுலகில் என் இரண்டாவது பதிவான கூகுளின் பரிணாம வளர்ச்சி , நான் பதிவை எழுதிய அடுத்த நாளே அச்சு பிசகாமல் இந்த பதிவு வேறு ஒருவரின் வலைத்தளத்தில் எடுத்தாளப்பட்டது.கூகுளிடம் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பதிவு பிற்பாடு நீக்கப்பட்டுவிட்டது.மீண்டும் இந்த பதிவு கீழுள்ள முகவரியில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது !!

திருட்டுப்போனவைகளில் மேலும் சில...

ஜிமெயில் ரகசியங்கள் -1                                         திருடப்பட்ட இடங்கள்
  1. http://jaffnapc.blogspot.com/2011/09/gmail-id.html மற்றும்
  2. http://www.kananiulakam.com/?p=961

இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் என் வலைப்பூவில் இருந்து திருடியிருக்கிறார்,இன்னொருவர் அதை திருடியவரிடமிருந்து திருடியிருக்கிறார்.

திருடப்பட்ட இடம்:

குறிப்பு:
நம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.

பதிவு திருட்டை தடுக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.


 

Post Comment

Wednesday, May 09, 2012

சுட்டெரிக்கும் வெயில் சுடாமல் இருக்க ...




         அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது, இந்த வருடம் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது என்று கூட சொல்லலாம்.திருச்சி,சென்னை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸ் (103.28 டிகிரி பாரன்ஹீட்) ஆக பதிவாகி உள்ளது.இது மனித உடலின் நார்மல் வெப்பநிலையை விட அதிகம்., அக்னி நட்சத்திரம் வெயிலின் ஆக்ரோசத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும்,வருகிற நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும்.பொதுவாக மே மாதத்தில் தான் வெயில் உச்சம் தொடும்.

    வெயில் வைக்கும் ஆப்புகள்:

    மக்களிடையே சிறியதும் பெரியதுமாக வெயில் சார்ந்த பாதிப்புகள் பரவ ஆரம்பித்துள்ளது.வேர்க்குரு,வெயில் கட்டிகள்,சரும கோளாறுகள்,உதடு வெடிப்பு,எடைகுறைவு,மஞ்சள்காமாலை,டைபாய்டு,வயிற்றுப்போக்கு,அம்மை,ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் மக்களை குறிவைத்து காத்திருக்கிறது.

    இதில் "ஹீட் ஸ்ட்ரோக்" என்கிற பாதிப்பு கோமா வரை மனிதனை தள்ளி விடும் தன்மை கொண்டது...

    அதென்ன ஹீட் ஸ்ட்ரோக் ?

        வெயிலில் அதிகம் அலைகிற நபர்களை குறி வைத்தே இந்த ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke) பாதிக்கிறது.வெயில் மனித உடலில் உள்ள நீர் சத்தை வெளியேற்றுகிறது.
     வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது உடலிலுள்ள நீர் தன்மை அதிகமாக வெளியேறிவிடுகிறது,இதனால் ரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கிறது.கெட்டியான ரத்தத்தை பம்ப் செய்ய குட்டி இதயம் ரொம்ப சிரமப்படுகிறது,உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் மயக்கம் ஏற்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் கீழே விழுகிறார்,சரியான முதலுதவி அளிக்க படாவிடில் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்படும்.

    தண்ணீர்... தண்ணீர்...


    வெயில் சார்ந்த நோய்களின் முக்கிய காரணம் நீரின் அளவு உடலில் குறைந்து போவதன் காரணத்தினால் தான் வருகிறது.

    தண்ணீரின் அவசியம்:

    மனித உடலில் நீரின் சதவீதம் 79%

  1. மூளையில் 75%
  2. ரத்தத்தில் 83%
  3. எழும்புகளில் 22%
  4. தசைகளில் 75%
  5. கல்லீரலில் 86%
  6. சிறுநீரகங்களில் 83%   -தண்ணீர் உள்ளது.

  7. னித உடலில் உள்ள பொருட்களில் தண்ணீருக்குத்தான் பெரும்பான்மை.ரத்த ஓட்டம்,உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சப்ளை செய்வது,உணவை சக்தியாக மாற்றுவது,உடல் உறுப்புகளை சத்துக்களை(nutrients) உறிஞ்ச வைப்பது,உடல் உறுப்புகளின் உராய்வை குறைப்பது,கழிவுகளை வெளியேற்றுவது என மனித உடலின் ஒவ்வொறு செயல்பாட்டுக்கும் நீர் அவசியமாகிறது.

    சுட்டெரிக்கும் வெயில் சுடாமல் இருக்க...

    1.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்,வெயிலில் செல்லும்போது கையில் ஒரு தண்ணீர் புட்டி(Water bottle) எடுத்து செல்வது நல்லது.தாகமாக,வறட்சியாக உணர்கிற சமயங்களில் எல்லாம் தயங்காமல் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    2.தினசரி குளியல் அவசியம்.

    3.குழந்தைகள் வெயிலில் விளையாட அனுமதிக்க கூடாது.விளையாட தோதான நேரம் காலை 6 முதல் 8 மற்றும் மாலை 4 முதல் 6.

    4.கார்பன் வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.பழச்சாறுகள்,இளநீர்,நீராகாரம்,மோர்,பால் போன்ற இயற்கை பானங்களை பருகுவது நலம்.

    5.ஈ மொய்க்கும் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.(இது வெயில் காலம் மட்டுமல்ல எக்காலமும் பொருந்தும் அறிவுரை).

    6.இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    7.வெயிலின் சூட்டை தணிக்கிறேன் பேர்வழி என்று குளிர்பானங்கள்,ஐஸ் க்ரீம்கள் அதிகம் சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.

    8.காபி (caffine உடைய பானங்கள்) அதிகம் சாப்பிடுவது உடற்சூட்டை அதிகரிக்கும்.

    9.இயற்கை கோடையின் கொடையாக அளித்துள்ள வெள்ளரி,தர்பூசணி,நுங்கு போன்ற கோடைக்கு இதமளிக்கும் விஷயங்களை அதிகம் சாப்பிடலாம்

    10.முடிந்த வரை வெயிலில் அலைவதை தவிர்த்து விடுங்கள்.வெயிலில் அதிகம் அலைபவர்கள் குளுக்கோஸ் கலந்த நீரை எடுத்து செல்வது நல்லது.
















     




 

Post Comment

Tuesday, May 01, 2012

பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-2)


(பதிவு திருடர்களும் திருட்டுகளின் வகைகளும்:)

   கடந்த பதிவில் பதிவு திருட்டு என்றால் என்ன என்று குறிப்பிட்டிருந்தேன்.பதிவு திருடர்களின் வகைகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.காப்பி பேஸ்ட் பதிவர்கள் (Copy & Paste Plagiarism):
  ம் பதிவுலக நன்பர்கள் மத்தியில் இவ்வகை பதிவர்கள் பெரும்பாலும் பற்றி அனைவருக்கும் தெரியும்.அச்சு பிசகாமல் அப்படியே நமது பதிவுகளை காப்பி செய்து தன் வலைப்பூவில் அல்லது தங்களின் வலைத்தளத்தில் வைத்துக்கொண்டு அதை எழுதியது தான் தான் என்பது மாதிரி சீன் போடும் நபர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள்.

2.வார்த்தை மாற்றும் பதிவர்கள்( Word Switch Plagiarism):
  ருவர் தன் உழைப்பையும்,நேரத்தையும்,சிந்தனையையும் செலவழித்து எழுதும் பதிவை காப்பி செய்து ஒரு சில இடங்களில் மற்றும் மாற்றம் செய்து(டச் அப்) தங்கள் பதிவாக வெளியிடுபவர்கள்.இப்படி செய்வதும் பதிவு திருட்டுத்தான் என்பதை பலர் அறிவதில்லை. சில நல்ல உள்ளங்கள் பதிவின் உண்மையான உரிமையாளர் சொல்லத்தவறிய விசயங்களை,அவர் சொன்ன அதே விசயத்தை தெளிவாக குறிப்பிட விரும்பி இது போல செய்வதுண்டு.இது போன்ற நல்ல நோக்கமுடைய நன்பர்கள் பதிவின் உரிமையாளரையோ அல்லது பதிவு எடுக்கப்பட்ட இணைய முகவரியையோ குறிப்பிட வேண்டும்.அப்படி செய்ய தவறும் பட்சத்தில் அதுவும் திருட்டு வகையில் தான் சேரும்.
இந்த வகை திருட்டுக்கு உதாரண பதிவு என் வலைப்பூவில்:

3.எழுத்து நடை திருடர்கள்(Style Plagiarism):
  ருவர் எழுதிய பதிவை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்றி,அதே பதிவை வேறு மாதிரி சொல்வது.காப்பி பேஸ்ட் செய்யாமல் எழுதிய பதிவு தான் என்ற போதிலும்.இதுவும் ஒரு வகையான பதிவு திருட்டு தான்.  
இவ்வகை திருட்டு பதிவின் உரிமையாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.ஆனால் காப்பி அடிக்கும் நபரின் புகழை இது குறைக்கும்.பெரும்பாலும் பதிவுலகத்திற்கு புதிதாக வரும் பதிவர்கள் பிரபல பதிவராகும் முயற்சியில் பிரபல பதிவர் போலவே எழுதுவது உண்டு.

4.உருவகத்திருட்டு (Metaphor Plagiarism):
   சொல்லுகிற கருத்தை தெளிவாக புரிய வைக்க சில விளக்கங்கள் அல்லது    
உருவகங்களை பயன் படுத்துவதுண்டு.இப்படி பிறர் கூறிய விளக்கங்களையோ உருவகங்களையோ சொல்லும்போது அதன் உரிமையாளர் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும்.அப்படி குறிப்பிடாமல் விடுபவர் உருவக திருடர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

5.கருத்து திருடர்கள்(Idea Plagiarism):
  ரு பதிவர் சொந்தமாக யோசித்து ஒரு கருத்தையோ,அல்லது ஒரு பிரச்சனைக்கு தீர்வையோ சொல்லியிருப்பார்.அதை நோகாமல் தன் கருத்தை போல சிலர் காட்டிக்கொண்டு தன்னை ஒரு அறிவாளி என சொல்லிக்கொள்வது உண்டு.
  சொந்தமாக யோசிக்க வக்கில்லாத,அதே சமயம் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற சில பதிவர்கள் இது போல செய்வதுண்டு.
                                           
விதிவிலக்கு:
                                                   
Public domain information என்று அழைக்கப்படும் பொதுப்படையான விசயங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இது பொது அறிவு வகேராவை சேர்ந்தது.பிறருடைய தனிப்பட்ட கருத்தை சொல்லும் போது "இதை இவர் சொல்லியிருக்கிறார்" என்று குறிப்பிட வேண்டும்.

தகவல் உபயம்:
Five Types of Plagiarism Taken From:
Barnbaum, C. Plagiarism: A Student's Guide to Recognizing It and Avoiding It.” Valdosta State
University

பதிவு திருடு போவதை எப்படி தடுக்கலாம் என்றும் பதிவு திருடு போனதை கண்டறிவது எப்படி என்றும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் படிக்க தவறாதீர்கள்...


வாசகர்கள் மற்றும் பதிவுலக நன்பர்களின் கருத்துக்களும் ஆதரவும் வரவேற்கப்படுகிறது.

 

Post Comment