Sunday, July 24, 2011

போலி சமச்சீர் கல்வி

(சமத்துவமும் சீரும் இல்லாத புதிய கல்வி முறை)



மீப காலமாக சமச்சீர் கல்வி பற்றி நிறைய செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த சொல்லி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு முறையிட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கின்றன.அக:2 க்குள் சமச்சீர் கல்வி பாடத்திட்ட நூல்களை விநியோகிக்கச் சொல்லி உத்தரவும் போட்டிருக்கின்றன.


சமச்சீர் கல்விமுறை பல அறிஞர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.இது தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தெல்லாம் சரி உண்மையிலேயே இந்த சமச்சீர் கல்வி முறை பயனுள்ளது தானா? மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட கல்வித் திட்டம் தானா?
இந்த பதிவில் சமச்சீர் கல்வி பற்றிய கருத்துக்களை பதியமிடுகிறேன்
மறக்காமல் பின்னூட்டம் (Comments) கொடுங்கள்...

 சமச்சீர் கல்வி



மிழகத்தில்,

1.அரசுப் பள்ளிகள்
2.மெட்ரிக் பள்ளிகள்
3.ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்,
4.ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.]

-என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் உள்ளன.
 
வை எல்லாவற்றிற்கும் பொதுவாக தமிழகத்தில் படிக்கிற அத்தனை பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்ட முறையை முன்னள் தமிழக அரசு உருவாக்கியது.இது தான் சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் மற்றும், அவர்களின் பெற்றோர்கள் மனதில் கவலையை கிளப்பிக் கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறது.

சமம் இல்லை:

இந்த சமச்சீர் கல்வி ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பயின்று கொல்லலாம் தமிழில் படிக்க விரும்புபவர்கள் தமிழில் படித்து க் கொள்ளலாம் என்கிற கொள்கையை கொண்டிருக்கிறது.அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் மொழி வழியாகவே ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் தாய் மொழிக் கல்வி மூலம் தான் மாணவர்களின் சிந்தனை புரிதல் போன்ற திறன்கள் மேம்படும்(ஆங்கில மீடிய மாணவர்களுக்கு தமிழ் சரியாக தெரியாது எனவே அவர்கள் ஆங்கில வழியில் கல்வி கற்பதே சரி என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறான சிந்தனை).ஆங்கிலம் மொழிப் பாடமாக மட்டும் இருப்பது சரி தான் ஆனால் வழிப்பாடமாக அதை எதிர்பார்ப்பது தவறு என்பதே என் கருத்து(பயிற்று மொழி).தமிழ் தெரியாத தமிழ் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுமே இந்த ஆங்கில வழி கல்வியால் தர முடியும்.
சமச்சீர் கல்வி சம நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்.

சீர் இல்லை:


மிழக அரசு இந்த போலி சமச்சீர் கல்வியை எதிர்த்தது அரசியல் காரண்ங்களுக்காக தான் என்று கூறப்பட்டாலும்,
பாடத்திட்டத்தின் குறைகள்,ழுத்துப்பிழைகள்,இலக்கணப்பிழைகள் இவைகளும் முக்கியக் காரணமாக உள்ளது.
மெட்ரிக் மற்றும் இதர கல்வி நிலையத்தை சார்ந்த பள்ளிகள் (Educatinal Boards).சமச்சீர் கல்வியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக இதை சுட்டிக் காட்டுகின்றன.

ழுத்தாளர் பா.ராகவன் தன் வலைத்தளத்தில் தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தை சேர்ந்த சமூக அறிவியல் புத்தகத்தை ஒரு சிறந்த நகைச்சுவை புத்தகமாக கூறியுள்ளார்,மேலும் நகைப்பிற்கு காரணமாக இருந்த அந்த புத்தகத்தின் பகுதிகளையும் பட்டியளிட்டுள்ளார்.



எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சமச்சீர் கல்வியை இப்படி குறிப்பிடுகிறார்:

"ந்த சமச்சீர் கல்விப்பாடங்கள்,மாணவர்களின் கோணத்தில் அல்ல ஆசிரியர்களின் கோணத்திலேயே அமைக்கப்பட்டுள்ளனஇன்றைய சர்வதேசப்போட்டிச்சூழலை ஒட்டி அவை அமைக்கப்படவில்லை. இன்றுள்ள ஆசிரியர்களுக்கு என்ன தெரியுமோ அதைக்  கற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மேலதிகப் பயிற்சி இல்லாமல் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தவேண்டும் என்பதே இலக்காக இருந்துள்ளதுஅந்த ஆசிரியர்கள் பெருபாலும் பத்துப்பதினைந்து வருடம் முன்பு பட்டம்பெற்றவர்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
முழுக்கமுழுக்கத் தகுதியற்ற ஆசிரியர்கள் தகுதியற்ற ஆசிரியர்களுக்காக அமைத்துக்கொண்ட பாடத்திட்டம் இது. கருணாநிதி அரசை எப்போதுமே ஆசிரியர்கள் தங்கள் சொந்த அரசாக நினைப்பவர்கள். அவருக்குத் தேவை அவரது பெயர் ஆங்காங்கே வருவது. அந்த சலுகையை அவருக்கு வீசித் தங்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்."

 ஒரு பொதுக்கல்வி திட்டத்தை தயாரிக்கும் போது பொருப்புணர்வு,விழிப்புணர்வு போன்றவை ஏதுமின்றி அவசர அவசரமாக செயல்பட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய கல்விமுறை. புதியதாக வருகிற முறை பழைய முறையைவிட மேம்பட்டதாக இருக்க வேண்டும்,ஆனால் இது தமிழகத்தில் நடைமுறையில் இருந்த முந்தைய கல்வி முறையை விட பின் தங்கியது என்பது வேதனையான விசயம்.
இந்த கல்வி முறை உண்மையில் சமச்சீர் கல்வி முறையே இல்லை,இதை பொதுக்கல்வி முறை என்று கூறுவது வேண்டுமானால் பொருந்தும்.
 

ரமான முறையில் பயிற்சியளிக்கப்பட்ட சரியான ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய சரியான பாடத்திட்டமும்,நடைமுறை வாழ்க்கையில் மாணவர்களுக்கு பயன்படும் விசயங்களையும் கொண்ட கல்வி முறையே சமச்சீர் கல்வி .சமச்சீர் கல்விக்கு நானும் ஆதரவாளன் தான் . மாறாக, ஒரு மட்டரகமான கல்வித்திட்டத்தை "இந்த போலி சமச்சீர்கல்வி முறையை"அனைவருக்கும் பொது என்று கட்டாயப்படுத்தினால் அது  ஆரோக்யமான நிலை அல்ல.இது கொடுமையான விசயம். 


இந்த கல்வி முறையால் பெரிதும் பாதிக்கப்படப் போவது வருங்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான நம் மாணவ சமுதாயம் தான்.



ந்த அரசு திரும்பவும் சமச்சீர் கல்வியை தகுதியான நிபுனர்கள் உதவியுடன் சீர் செய்து வேறு வடிவில் அடுத்த ஆண்டு மறுபடியும் அறிமுகப்படுத்தலாம் என்றே எனக்குப் படுகிறது.

நீங்க என்ன நினைக்கிறீங்க?...



 

Post Comment

Friday, July 22, 2011

கம்ப்யூட்டர் மூலம் கொசு விரட்டலாம்


 கொசுவை விரட்ட எத்தனையோ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கொசுவர்த்தி காயில்,கொசுவலை,இன்னும் நிறைய (எதுக்குமே அடங்க மாட்டேன் என்று பல கொசுக்கள் வரம் வாங்கி வந்திருக்கின்றன )இது கொஞ்சம் வித்தியாசமான கண்டுபிடிப்பு.

 பொதுவாக கொசுவை விரட்ட ரசாயனங்கள்(chemicals) கலந்த கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன, இவைகள் கொசுக்களை கொல்கின்றனவோ இல்லையோ நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றன.

 தொல்லை கொடுக்கும் கொசுவை விரட்ட கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவதன் மூலம் உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.

அது எப்படிங்க சாத்தியம்??

தும்பி அல்லது தட்டான்பூச்சி(dragon fly) என்று அழைக்கப்படும் பூச்சிகள் கொசுக்களுக்கு பரம எதிரிகள். ஆனால் கொசுக்கள் இவற்றின் வரவை உணர்ந்து இவைகளிடம் இருந்து தப்பித்து செல்வது விஞ்ஞானிகளின் மூளையில் ஆச்சரியக்குறி கலந்த கேள்விக்குறியாக உதித்தது.


அவர்கள் செய்த ஆராய்ச்சி தும்பிகள்(dragon flies) பறக்கும் போது அவற்றின் உருவ அமைப்பிற்கு தகுந்த மாதிரி குறிப்பிட்ட அலைநீளத்தில் (தோராயமாக 45 மற்றும் 67 Hz க்கு இடைப்பட்ட) சத்தம் எழுப்புகின்றன,இந்த சத்தத்தை உணர்ந்து தான் கொசுக்கள் தும்பிகளிடமிருந்து தப்பித்து செல்கின்றன என்ற முடிவுடன் முடிவானது.

நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் இந்த மென்பொருள் நீங்கள் தருகிற அலைநீளத்தில் ஒலியை உருவாக்கி தருகிறது.(56Hz என்பது கொசுவிரட்ட போதுமான சராசரி சத்தம்)இந்த சத்தத்தை ஒலிக்க செய்வதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்!

உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்த
நீங்கள் செய்ய் வேண்டியது என்ன?

டோன் ஜெனரேட்டர் என்று அழைக்கப்படுகிற சாப்ட்வேரை உங்கள் கணிப்பொறியில் install செய்து கொள்ளவும்.

பின் அதன் மூலம் 57 Hz அளவில் ஒலியை உருவாக்கவும்.

கணினியின் உதவியால் அதை ஒலிக்க செய்யவும்.


குறிப்பு:

1.உங்கள் கணினியில் Pc sound card மற்றும் Speakers இருக்க வேண்டும்.(இல்லையென்றால் நீங்கள் உங்கள் கனினி மூலம் உருவாக்கிய அந்த ஒலியை கணினி உதவியின்றி வேறு முறையில் ஒலிக்கச் செய்யலாம்)

2.சத்தம் காதுக்கு கேட்கும் அளவில் சரிசெய்து கொள்ளவும்.

3.நீங்கள் இந்த சாப்ட்வேர் தவிர வேறு சில டோன் ஜெனெரெடர் களையும் (tone generator software) பயன்படுத்தலாம்.

கொசு விரட்டியாக பயன்படுத்தப் போகும் சாப்ட்வேர் கிடைக்கும் முகவரிகள்:


இந்த சாப்ட்வேர் பற்றி அறிந்து கொள்ள:

 

Post Comment

Saturday, July 16, 2011

கூகுளின் பரிணாம வளர்ச்சி

 இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLE தான்.தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கூகுள் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்தது,கூகுளுக்கு முன்பே இணையப் பக்கங்களை தேடுவதறகு சில தேடுபொறிகள்(search engines) புலக்கத்தில் இருந்தன,ஆனால் கூகுள் தனது அசாத்திய வளர்ச்சியின் மூலம் அவைகளைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

1996 ஜனவரி மாதம் California மாகானத்தில் உள்ள STANFORD பல்கலை கழகத்தில் Phd((டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்பு) மாண்வர்களான லேரி பேஜ் மற்றும்  செர்ஜி ப்ரின் (larry page & sergy brin) ஆகியோரால் ஆய்வு முடிவாக (Research Project) கூகுள் ஆரம்பிக்கப் பட்டது.

1997
கூகுள் இணையதளம் முதன் முதலில் தனது பணியை துவங்கியது,கூகுளின் முதல் இணைய பக்கம் www.google.stanford.edu  என்ற முகவரியில் தங்கியிருந்தது. கூகுள் இணைய தளத்தின் முதல் லோகோ(logo) வை Sergy brin வடிவமைத்தார்.கூகுள் அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த  Yahoo வில் இருப்பது மாதிரியே தன் logo விலும் ஒரு ஆச்சரியக்குறியை சேர்த்துக் கொண்டிருந்தது.





1998
Stanford search பட்டன் Subscribe box  போன்றவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அதன் வடிவமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறை கூகுள் தன் பெயருடமன்  BETA என்கிற பெயரையும் தாங்கி வலம் வந்தது.(Beta  என்றால் சோதனை முயற்சியில் விடப்ப்பட்டதென அர்த்தம்,பயனாளர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த பதிப்பை வெளியிடுவார்கள் ).



1999
தேவையில்லாத விசயங்களை தன் இணையப் பக்கத்தில் குவிக்காமல்
தெளிவான பக்கத்துடன் வெளிவந்தது. Stanford search button மற்றும் Subscribe button  போன்றவைகள் ஏதுமின்றி தனது தேடுதல் பணியில் களமிறங்கியது.


2000
சிறந்த தேடுபொறி என கௌரவ படுத்தபட்டது,பின் தன்னுடன் இணைத்து வைத்திருந்த Beta என்ற பெயரை தன்னிடமிருந்து அகற்றிக்கொண்டது."About Google",Jobs@google போன்ற புதிய லின்க் களை தன்னுடன் இணைத்துக்கொண்டது.


2001
  செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான தாக்குதல் கூகுளில் சில மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது,கூகுள் செய்திகள் மற்றும் கூகுள் support  ஆகிய சேவைகள் புதிதாக கூகுள் உடன் இணைக்கப்பட்டன.
இணைய பக்கங்களை தேடுவதுடன் நிறுத்திக் கொளளாமல் சிறப்பான இதர சேவைகளையும் செய்ய வெண்டும் என்ற முயற்சியில் கூகுள் இறங்கியது.


2002
Search box க்கு மேற்புறம் புதிய பட்டைகளுடன் (Tabs) புதிய பொலிவுடன் கூகுள் வலம் வரத் துவங்கியிருந்தது, Dooddle என்று அழைக்கப்படும் புதுப்புது Google Logo உடன் வெளிவரத் துவங்கியது,Google ன்முதல் Doodle  லேரி பேஜ்&செர்ஜி ப்ரின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.



2003
கூகுள் காதலர் தினத்தை தனது ரசிகர்களுடன் புதிய Doodle உடன் கொண்டாடியது,இதன் பிறகு கூகுள் முக்கிய நிகழ்வுகள்,முக்கியமான விடுமுறை தினங்கள் போன்றவற்றிற்கு புதிய Doodles களை அறிமுக படுத்த துவங்கியது.


2004
Doodles மக்களிடையே பிரபலமடைய துவங்கியிருந்தது,2004 ஆம் ஆண்டு தான் GMAIL  அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் சில பட்டைகள்(Tabs) சேர்க்கப்பட்டன மற்றும் சில TAB கள் மாற்றம் செய்யப்பட்டன.2004 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் கொண்டாட்டத் திற்கான Doodles உடன் கூகுள் பக்கம்


 2005
பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை கூகுளில் Google "Local" என்ற புதிய TAB இணைக்கப் பட்டது.

2006
கூகுள் தளத்தின் வலது மேற்புறத்தில் வியத்தகு விதத்தில் வடிவமைக்கப்பட்ட லின்க் கள் கொண்ட பகுதி அறிமுகப்படுத்தப் பட்டது.இது கூகுள் சேவைகள்,மற்றும் கூகுள் கண்க்குகள்(google services& accounts) போன்றவைகளில் பயனர்கள்(users) Log in ஆக ஏதுவாக அமைக்கப்ப்ட்டது, மேலும் இது பயனுள்ளதாகவும் இருந்தது.

2007
கூகுள் 11 வயது குழந்தையாக இந்த வருடத்திற்கான தனது சேவையை ஆரம்பித்தது.Tab கள் தேடு பெட்டியின் மேலே இருந்து Screenன் ன் மேல் இடது மூலைக்கு பதவி உயர்வு பெற்றது.IGOOGLE அறிமுகப் படுத்தப்பட்டது.


2009
2009 ல் இருவேரு அவதாரங்களை கூகுள் எடுத்தது முதல் முறை கூகுள் SEARCH BOX மற்றும் பட்டன்கள் பெரிது படுத்தப்பட்டன கூகுள் Search, I'M Feeling Lucky ஆகிய பட்டன் களுக்கு இடையேயான இடைவெளி சற்று அதிகப்படுத்தப்பட்டது.
2009 ன் இரண்டாவது அவதாரம்:
கூகுள் லொகோ மற்றும் SEARCH பட்டன்கள் மட்டும் காட்டப்பட்டன மற்ற லின்க் கள் அனைத்தும் மங்களாக (Fade out) காட்டப்பட்டன,அந்த லின்க் களின் அருகே மவுஸ் கர்சரை கொண்டு செல்லும் போது மட்டும் அந்த லின்க் கள் தெளிவாக காட்டப்படும் படியாக வடிவமைக்கப்ப்ட்டிருந்தது.

2009 ன் முதல் அவதாரம்:



 2009 ன் இரண்டாம் அவதாரம்:



2010

கூகுள் லோகோ வின் பொழிவு கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டது, கூகுள் தேடுபொறியின் வெள்ளை பக்கம் நமக்கு பிடிக்க வில்லை என்றால் அதன் பின்புலத்தை(Back ground) மாற்றும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டது.
  


2011
கூகுளின் தற்போதைய நிலை


ஒரு சின்ன புள்ளி விவரத்தோட இந்த பதிவை முடிக்கிறேன்...


2006 ல்


2008 ல்
கூகுளின் வளர்ச்சி


கூகுளுக்கு இப்ப 14 வயசு ஆகுது,இந்த சின்ன வயசுல அது அடைந்திருக்கும் வளர்ச்சி கொஞ்சம் அதிகம் தான் அது இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துவோம்...



 

Post Comment