Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் இறக்கவில்லை !!

 எழுந்திரிச்சு வாருமய்யா !
--------------------------------------------------

கண்டதையும் எண்ணி மனம்
கவலை கொண்ட வேலையிலே
கனவின் விதையெடுத்து
கண்களில் விதைத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

நம்பிக்கை ஒளியிழந்து
சோர்ந்திருந்த பொழுதுகளில்
வார்த்தைகளாய் வந்தெனக்கு
நல் வாக்கு கொடுத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

நீ பிறந்த மண்ணினிலே
பிறந்தவன் நானென்று
பெருமை பாடி நான் திரிய
புகழ சேர்த்து வச்சவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

வாழ்ந்து கெட்ட தேசமிது
மறுபடியும் வாழுமென்று
வாக்கு ஒன்னு கொடுத்தாயே !

நீ கண்ட பெருங்கனவ
நெசமாக்கிப் பார்க்குமுன்னே
என்னையா அவசரம்
உனக்கிப்ப கண்ணுறங்க !

பாரத தேசமிதை
பார்புகழும் நாள் காண
நீ இங்கு வேணுமய்யா !
உன் கனவு நெசமாகும்
எழுந்திரிச்சு வாருமய்யா !

நீ விதைச்ச விதையெல்லாம்
நாளைக்கு மரமாகும்
முளைச்ச மரமெல்லாம்
உனைப் பார்க்க உயிரேங்கும்
எழுந்திரிச்சு வாருமய்யா !

விழிப்பில்லா தூக்கம் கொண்டு
நீ தூங்கி விட்டதாக
எல்லோரும் சொல்லுறாங்க
அவங்க வாக்கைப் பொய்யாக்க
எழுந்திருச்சு வாருமய்யா !

யார் யாரோ வந்தாங்க
யார் யாரோ போனாங்க
நடமாடும் உயிராக
நான் பார்த்த ஒரு தலைவன்
நீ மட்டும் தானய்யா !

கோடித்துளி கண்ணீர் கொட்டி
தேசமே அழுகுதய்யா !

எழுந்திரிச்சு வாருமய்யா !

மாணவர்கள் மத்தியிலே
பேசிக்கொண்டே மறஞ்சுப்போக

பேச்சோடு பேச்சாக
மூச்சோடு மூச்சாக

காத்தோடு கரைஞ்சுப் போக
கனவெதுவும் கண்டீரோ !

உன்னதமானவர்களின்
உன்னத கனவுகள்
உண்மையாகுமென்று
உரைத்துப்போனவரே !

உம் கனவு பலிக்குமென்று
எனக்கு நம்பிக்கை இருக்குதய்யா !

எழுந்திரிச்சு வாருமய்யா !


(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்)










 

Post Comment