Saturday, December 10, 2011

என்றும் அழியா பாரதி ....



"இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் -
எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் ஓடிப்போம் திரும்பி வாரா.."
                                         -பாரதி

 " பாரதி ஒரு அற்புதமான கவிஞன்,வித்தியசமான மனிதன் ! ",
அவன் வரலாற்றை படிக்கிற எவரும் சட்டென்று இந்த உணர்வு நிலையில் தான் கட்டுண்டாவோம் .


பாரதி....
விஞன், எழுத்தாளன், பத்திரிக்கையாளன், சமூக சீர்திருத்தவாதி,விடுதலை வீரன்,  என  பல்வேறு தலங்களில் புரட்சி ஒளி வீசிய புது ஞாயிறு அவன் .

இலக்கணமுறை சிரிதும் பிறழாமல் (பாமர ஜனங்களுக்கு புரியாத மாதிரி) கவி 
செய்த  அக்கால கவிகளுக்கு மத்தியில்...
"புரிகிற வடிவில் கவியை எளிதாக்கி,
புரட்சி விதையை கவியுள் பதுக்கி 
புரட்சி செய்த புதுக்கவிஞன்"

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடந்த மக்களை கரையேற்ற வந்த கடவுள்.

தமிழ் மொழியை புது நடையில் பேசவைத்தவன்

"கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி "   
                                    - பாரதி.


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்  என்று கூறி வாழ்வையே கவிதையாக வாழ்ந்த மகாகவி

பாரதியார் பல கவிஞர்களுக்கு மானசீக குருவாக இன்றளவும் இருக்கிறார். என் மனம் அவரது பாடல்களை கேட்கிற போதும், உச்சரிக்கிற போதும் புது உணர்வு பெற்று உற்சாகம் அடைய தவறியதே இல்லை.

என் மனம் சோர்வு அடைகிற வேளைகளில் எல்லாம்

"நல்லதோர் வீணை செய்தே........."

"தேடிச் சோறுநிதந் தின்று......."

"நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..."

"அச்சமில்லை அச்சமில்லை...."

போன்ற பாடல்களில் என்னை பாரதி உர்ச்சாகமூட்டுகிறான்,


வருமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட 
"ஜெயமுண்டு பயமில்லை மனமே..." 
-என அவனால் எப்படி பாட முடிந்து,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட
" காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" 
-என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது -என நான் அடிக்கடி யோசிப்பதுண்டு...

'தனக்கென்று மட்டும் வாழ்கிற மனிதர்கள் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள், ஆனால் பிறர்க்கென்று வாழ்கிற உயர்ந்த உள்ளங்கள் இறந்தும் கூட இருக்கின்றார்கள்.'-என்று நாம் படித்திருக்கிறோம்...

தனக்கு அழிவில்லை, தனக்கு மரணமில்லை என்று தன் பாடல்களில் பாரதி கூறியிருக்கிறான்.
நிச்சயம் அது உண்மை தான்.
அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்
பாரதியின் பெயரை உச்சரிக்கிற போது....
பாரதியின் பாடல்களை கேட்கிற போது....
பாரதியின் எழுத்துக்களை வாசிக்கிற போது....

உச்சரிக்கிறவனிடம்
கேட்கிறவனிடம்
வாசிக்கிறவனிடம் அவன் தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....

என்றும் புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறான் பாரதி 

                                                                                                                                                                    

மகாகவியே உன் பாதம் பணிகிறேன்.... 


பாரதியாருக்காக தொடுக்கப்பட்ட சில வலைப் பூக்கள்:


(பிறவிக்கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதைவடிவில்)



(கவிதைகளின் தொகுப்பு)

3. 






                                                                                                                                                              -விஜயன்

 

Post Comment

Friday, December 09, 2011

ஆங்கிலம் கற்பதற்கான பேஸ்புக்

(ஆங்கிலம் கற்க ஒரு இனிய வழி)

 
 ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் (class bites) தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.இதனை கற்பதற்கான பேஸ்புக் என்று கூட சொல்லலாம்.
  மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்கிறது. என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் விடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது..


குறும்பாடங்கள் என்றால் என்ன?? 
 கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.
குறும்பாடங்கள் என்றால் "பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் "என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

இந்த கற்றல் முறை குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


கிளாஸ்பைட்ஸ் தளத்தின் சிறப்பாம்சங்கள் என்னானா...

  • கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?

(மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.)

  • ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

  • குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

  • உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.

  • கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  • இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் (தமிழர்கள்) இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.


இந்த தளத்தில் இணைவதால் என்னா நன்மை??

 உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் (wall) உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.

குரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.

லக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கற்க இருக்க முடியுமா என்ன??


இணையதள முகவரி;http://classbites.com/

தகவல் உபயம்:: http://cybersimman.wordpress.com


 

Post Comment