Wednesday, October 16, 2013

புத்தகக் குறிப்புகள் -1

  புத்தகங்கள் மீது எனக்கு அதீத காதல் உண்டு.,அவை எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளன ,கற்றுக்கொடுக்கின்றன.
 அனுபவமே கடவுள் என்கிறான் கண்ணதாசன்...அவன் அனுபவித்த அனுபவங்கள் அப்படி, அனைத்து விசயங்களையும் அனுபவித்துத் தான் கற்றுக்கொள்வேன் என்று அடம்பிடிப்பது அறியாமை.
 தன் அனுபவங்களிலிருந்து மட்டுமின்றி பிறரின் அனுபவங்களில் இருந்தும் கூட கற்றுக்கொள்ள வேண்டும். என்பது என் அனுபவம்.

 வாசிப்பை பொறுத்தவரையில் நான் ஒரு (சகலபட்சினி )ஆம்னிவோரசாக அனைத்து ரக புத்தகங்களையும் வாசிப்பேன். ப்ச்..ஆனால் சில மோசமான புத்தகங்கள் நம் நேரத்தை வீணடித்துவிடுகின்றனசர்வநிச்சயமாக மோசமான புத்தகம் என்பது மோசமான எதனைவிடவும் மிக மோசமானது என்பேன்.
 இப்போது வேலைவெட்டிகள் வெட்டியான நேரத்தை வெட்டிவிடுவதால் முன்பு போல நிறைய வாசிப்பதில்லை, வாசிக்க முடிவதில்லை...
எழுத்து என்னை இழுத்துச் சென்றால் மட்டுமே நான் வாசிப்பை தொடர்கிறேன்.

 புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர் கார்ல் சாகன் பின்வருமாறு சொல்லியிருக்கிறார். (நான் இவரது நாவலை மையமாக வைத்து படமாக்கப்பட்ட “contact” என்ற திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்,ஏலியன்கள்,டைம் ட்ரேவல், டைம் டயலேசன்...என்று Sci-Fi ரகம் )

" புத்தகம் என்பது எத்தனை அற்புதமானது,ஏகப்பட்ட வேடிக்கைகளுடன்,கரிய வளைந்த எழுத்துக்களுடன், மடிக்கும் வகையில் இருக்கும் அச்சடிக்கப்பட்டப் பக்கங்களுடன் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தட்டையான பொருள் அது.ஆனால் அதில் நாம் கண்ணோடும் போது யாரோ ஒருவரின் மனவெளிக்குள் பிராயாணப்படுகிறோம்,அந்த யாரோ ஒருவர் பல்லாயிரம் வருடத்திற்கு முன் இறந்துபோனவராகக் கூட இருக்கலாம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட அதை எழுதிய அந்த யாரோ ஒருவர்  உங்களுக்குள்,உங்களுடன் நேரடியாக பேசுகிறார்.முன்பின் தெரியாத இருவரை சகாப்தங்கள் கடந்து சந்திக்க வைக்கும் இந்த எழுத்துக்கள் ஒருவேளை மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கக் கூடலாம்.புத்தகம் காலத்தின் கைவிலங்கை கழட்டி வீசி விடுகிறது.மனித இனம் மாயஜால வேளைகளை நிகழ்த்த வல்லது என்பதற்கு புத்தகங்களே சாட்சி "
புத்தகங்களைப் பற்றி இப்படியாக நிறைய பேருடைய பொன்மொழிகள் இருக்கின்றன...! தலைவர்கள்,புரட்சியாளர்கள்,சிந்தனையாளர்கள்,படைப்பாளிகள் என பல்வேறு பரிமாணங்களில் பலபேரை உருவாக்கிய பெருமை புத்தகங்களுக்கு உண்டு !
 புத்தகங்களைப் பற்றிய போதுமான புரிதல்கள் இல்லாத பல பேர் புத்தகப் பிரியர்களாக இருக்கும் சில பேரை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் வானத்தில் இருந்து குதித்த ஒரு ஏலியனைப்போல...(இத்தகைய பார்வைகளை சந்திக்காத புத்தகப்பிரியர்கள் பாக்கியவான்கள் !)

தற்போதைய காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது போலவே படுகிறது, சினிமா விமர்சனம் ,கிசுகிசு ,செய்தி மேய்தல் என்பதாகவோ ,சமையல்கலை,போட்டித்தேர்வு,பரிட்சை என்பதாகவோ தான் எழுத்துக்களின் பரிட்சயம் பலருக்கு வாய்க்கிறது.. எழுத்து திறந்து வைக்கும் வேறு பல கதவுக்குள் நுழைய மறுக்கிறார்கள் அவர்கள்.
 புத்தகக் கடைகளில் இருக்கும் அந்த குறைஜனக் கூட்டத்தை பார்க்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது, "யப்பாடா இப்படியாக சில பேர் இருப்பதால் தான் புத்தகக் கடைகள் திறந்திருக்கின்றன,இல்லைனா என்னாவது.." என்று மனம் நினைத்துக்கொள்கிறது...

 .புதிது புதிதான விசயங்களை சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமின்றி என்னையும் புதுப்பிக்கின்றன சில புத்தகங்கள்.என்னில் தோன்றிய எண்ணிலாக்கேள்விகளை எண்ணிக்கைக் குறைத்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன சில புத்தகங்கள்.சிலிர்க்க,சிந்திக்க,சிரிக்க என வகை வகையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்னோடு சில புத்தகங்கள்..

 வாசிப்பு பற்றியும் நான் வாசித்தவைகள் பற்றியும், நான் நேசித்த புத்தகங்கள் பற்றியும் "புத்தகக் குறிப்புகள்" என்ற பெயரில் "கடற்கரை" வலைப்பூவில் பகிரலாம் என்று எண்ணமிட்டுள்ளேன் :)

                                                   

 

Post Comment

Monday, October 14, 2013

பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 6)
பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

                                                



நான் கல்லூரியில் காலம் கழித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது:
 து ஒரு கல்லூரி வேலை நாள் ( Working day) எங்கள் பக்கத்து வகுப்பு மாணவர்கள் சில பேர் அன்று மதியம் கல்லுரியை கட் அடித்துவிட்டு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர், தியேட்டரில் அவர்கள் டிக்கெட் எடுத்தது முதல் வெளியே வரும் வரையில்  புகைப்படங்களாக சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
மறுநாள்..கட் அடித்த இன்ப நிகழ்வின் சந்தோசத்தை தன் சக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் நண்பனொருவன்..
அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பகிர்வு (share) செய்துள்ளான்,அவனது அதிர்ஷ்டமோ,அவனோடு கட்டடித்த இன்னபிற நன்பர்களின் அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை நண்பர்கள் பட்டியலில் அவர்கள் H.O.D மற்றும் சில லெக்சரர்களும் அவனுக்கு இருந்துள்ளனர்.

இந்த பேஸ்புக் இருக்கிறதே இது நன்பர்கள் என்பதற்கான அர்த்தத்தையே இப்போது மாற்றி வைத்திருக்கிறது பாருங்கள் ,நன்பர்கள் பட்டியலில் வகுப்பு வாத்தியார்கள்,சக பணியாளர்,அலுவலக முதலாளி,அண்ணன்,அக்கா,தம்பிஇன்னும் எல்லா வகையினரும்.. (சில நபர்களுக்கு இவர்கள் நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பது சிறு ஆறுதல்). 
 அட இது என்ன பிரமாதம் நம்மில் அநேகருக்கு பேஸ்புக் நன்பர்கள் பட்டியலில் நண்பர்கள் மட்டும் இருப்பதில்லை,யாரென்றே தெரியாத யாராரோவெல்லாம் கூட இருக்கிறார்கள்.

சரி நாம் கதைக்கு வருவோம், நம்ம நண்பன் பகிர்ந்த அந்த "கட் படலத்து" போட்டோக்களை அவர்கள் H.O.D பார்த்து விட்டார்,அவர் இந்த மேட்டரை பிரின்ஸ்பால் வரை கொண்டு போய்விட்டார் ,பெற்றோரிடம் சொல்லுதல்,வகுப்பைவிட்டு தள்ளிவைத்தல் (suspend) என்றெல்லாம் சென்ற பேச்சு Fine னோடு முடிந்தது.

இப்படியாகத்தான் நாம் சில நேரங்களில் பகிரக்கூடாத நபர்களிடம் பகிரக்கூடாத விசயத்தை பகிர்ந்துவிட்டு பல்பு வாங்குவதும்,பகீர் ஆவதுமாக இருக்கிறோம்.

நாம் சேர் செய்யும் தகவல்கள் யார்யாருக்கு தெரிய வேண்டும், யார்யாருக்கு தெரியக்கூடாது என்று நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையை பேஸ்புக் நமக்கு வழங்குகிறது, இது பற்றி இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் கூறியிருந்தேன்.
இதேவகையில் நம் நன்பர்களை வகைப்படி அதாவது தெரிந்தவர்,தெரியாதவர்,நன்பர்,ஊர்க்கார்ர்,உறவுக்காரர் என நன்பர்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு பிரித்து வைக்கும் உரிமையையும் வழங்குகிறது.

அதெப்படி என்பதை பார்க்கலாம்...

படி 1: உங்கள் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் லாக்-இன் ஆகி ,டைம்லைனுக்கு செல்லவும்


படி 2:: பின்பு Friends என்பதை கிளிக் செய்து நண்பர்கள் பட்டியலுக்குள் சென்று கொள்ளுங்கள்



படி 3:  உங்கள் நண்பர்கள் பட்டியல் இப்போது உங்களுக்குக் காட்டப்படும்.

படி 4 : இங்கு நீங்கள் உங்கள் நண்பர்கள் பெயருக்கு அருகே இருக்கும் friends என்ற வார்த்தையை க்ளிக்கினால் கீழுள்ள மாதிரி ஒரு மெனு பட்டியல் வரும்.
                      

இந்த மெனு பட்டியலில் "close friends" (நெருங்கிய நண்பர்கள்) "Acquaintances "  (தெரிந்தவர்கள்), நீங்கள் வேலை பார்க்கும் அலுவலக பெயர்,நீங்கள் படித்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்த பள்ளி,கல்லூரி பெயர் போன்றவை Default ஆக இருக்கும். குறிப்பிட்ட வகையில் க்ளிக் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட நண்பரை குறிப்பிட்ட பட்டியலில் சேர்க்க முடியும்.
(**குறிப்பிட்ட நபரை நண்பர் பட்டியலிலிருந்து தூக்க Unfriend செலக்ட் செய்யவும்,பேஸ்புக்கில் புகார் செய்ய Report/block செலக்ட் செய்யவும்)


அந்த நண்பர் எந்த வகையிலும் சிக்கவில்லை என்றால் " add to another list" என்ற ஆப்சனை செலக்ட் செய்து, பின் வரும் New list பெட்டியியில் நீங்களாக பெயர் கொடுத்து புதிய நண்பர்கள் பட்டியலில் அவரை சேர்க்கலாம்.

நீங்கள் உருவாக்கிய நண்பர்கள் பட்டியல்கள் groups,pages,fav போன்ற வகையறாக்களுடன் பேஸ்புக்கின் இடது ஓரத்தில் இருக்கும்  ,
                      
அதை க்ளிக்கினால் குறிப்பிட்ட அந்த பட்டியலில் உள்ள நபர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்,படங்கள் போன்றவைகள் மட்டும் காட்டப்படும்.

ஒரு உதாரணம்



இங்கு வலதுபுறம்(Right) உள்ள பெட்டியில் நன்பர்கள் பெயரை டைப் செய்து பட்டியலில் பங்காளராக்கலாம்.
                
 மேற்கண்ட வழிமுறைகளின் படி பட்டியலை உருவாக்கியவுடன் . அந்த பட்டியலில் இணைக்கப்படவேண்டிய இன்னபிற நண்பர்கள் பெயரை இங்கு டைப்பி "பட்டியலில்" சேர்க்க முடியும்.இப்படியாக பட்டியலை நிறைப்பது எளிய முறை.

நீங்கள் பகிரும் தகவல்களும் "Custom list " (பட்டியல் நபர்களுக்கு) மட்டுமே பகிரப்படும்.

இத்தொடரின் அனைத்து பாகங்களும்:

1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எச்சரிக்கை: பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகின்றன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

அடுத்தப்பதிவை விவாத மேடை வடிவில் வாசகர்களின் கருத்துக்களோடு எழுதலாம் என விழைகிறேன்,பேஸ்புக் பற்றிய தங்களின் கருத்துக்களை தவறாது கூறுங்கள் அன்பர்களே !!
 vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ சொல்லலாம்.அடுத்தப்பதிவில் அவை பிரசுரிக்கப்படும்.

 

Post Comment