Thursday, June 30, 2016

பேஸ்புக்'கில் ஆபாச படம்: உஷார் பதிவு (பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

பேஸ்புக்'கில் ஆபாச படம்: மாணவி தற்கொலை

   "  'பேஸ்புக்'கில், தன் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியானதால், அதிர்ச்சியுற்ற இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.    "
                                                   -தினமலர் 28.6.2016 

                              


சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி என்ற அந்த ஊரில் ஒரு தறி நெசவாளியின் மகள் வினுப்பிரியா, 21 வயது. பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு உதவியாக இருந்து வந்திருக்கிறாள். படித்த பிள்ளையாயிற்றே  பேஸ்புக்கில் இல்லாமல் இருப்பாளா ! 

பேஸ்புக்கில் விஸ்தாரமான நட்புவட்டத்தை வளர்த்து வைத்திருந்திருக்கிறாள். 

 "செம", "super", "cute", "அழகா இருக்க" என பெண் பிள்ளைகளிடம் வழிகிற கூட்டம், இவளிடமும் வலிய வந்து வழிந்திருக்கிறது. வயசுக்கோளாறு, ஆர்வக்கோளாறு வினுப்பிரியாவும் தனது புகைப்படங்களை பேஸ்புக்கில் அவ்வப்போது பதிந்து கொண்டு வந்திருக்கிறாள். 

இந்நிலையில் கடந்த பதினாறாம் தேதி "மைதிலி வினுப்பிரியா" என்கிற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் வினுப்பிரியாவின்  புகைப்படங்கள் அரைநிர்வாண நிலையில் இருக்கும் வேறு படங்களுடன் மார்ப்பிங்க் செய்யப்பட்டு வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசி எண்ணுடன் பரப்பப்பட்டிருக்கிறது., ( மார்ப்பிங்க் :  ஒரு படத்தின் உடல் அமைப்புடன் வேறு புகைப்படத்தில் இருக்கும் தலையை கணினி உதவியுடன் ஒட்டும் செயல்)  .அதே தினம் வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசிக்கு யாரோ ஒருத்தன்  கால்  செய்து "ஒன் பொன்ன அடக்கி வைக்க மாட்டியா.." என ஆபாசமாக பேசியிருக்கிறான்.   17 ந்தேதி வினுப்பிரியாவின் அத்தைப்பையன் வினுப்பிரியாவின் அப்பாவிடம் உங்கள் மகளின் படம்  பேஸ்புக்கில்  ஆபாசமாக வெளி வந்திருக்கிறது என சொல்லியிருக்கிறான்.

மகளை திட்டியிருக்கிறார்கள்., பின் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள் , அளித்தும் பலனில்லை, இந்த மார்ப்பிங்க் செயலை செய்தது யார் என கண்டறிய இயலவில்லை.

" முதலில், என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கை முடிந்தபின், நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாதபோது, நான் உயிரோடு இருந்து, என்ன பிரயோஜனம்; அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகின்றனர். சத்தியமாக சொல்றேன், என் போட்டோவை, நான் யாருக்கும் அனுப்பவில்லை; எந்த தப்பும், நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். மீண்டும் ஒருமுறை சாரி... சாரி..."

என  கடிதம் எழுதி வைத்துவிட்டு  (27 ந்தேதி)  செத்துப்போய் விட்டாள் ! 

இப்போது அந்தபோலி பேஸ்புக் கணக்கை போலீசார்  முடக்கியிருக்கிறார்களாம்,  தாமதம் !!

**********

நேற்று செய்தித்தாளில் இந்த செய்தியை பார்த்ததும் பகீர் என்றது ! அடப்பாவிகளா !! ஒரு பெண் பிள்ளையை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவள் உங்களுக்கு பிடி கொடுக்கவில்லையென்றால் இப்படிப்பட்ட கேடுகெட்ட வேலையில் ஈடுபடுவீர்களா!! நரநாய்களா ! என கோபம் வந்தது . அந்த பெண்ணையும் அவளை கன்னி வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களையும் யோசித்துப்பாருங்கள் .

சரி!  பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தானதா ! 

ஏற்கனவே இது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன் . ( கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து அதை வாசிக்கலாம் )


இந்த பதிவில் பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை ஏற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகளப் பற்றி பார்ப்போம்.

**********


சைக்கலாஜிக்கலாக பெரும்பான்மையான பெண்கள் ( சிறும்பாண்மை யினரில் இருக்கும் பெண்கள் என்னை மன்னிப்பீராக). பகட்டாக உடுத்திக்கொள்ள வேண்டும், அலங்காரம் செய்துகொள்ள வேண்டும், நகை அணிய வேண்டும்  அதையெல்லாம் க்யூட்டான ஸ்மைலி எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்து பலரது லைக்குகளை வாங்க வேண்டும்  என்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பெண்கள் மொக்கை ஸ்டேட்டஸ் போட்டாலே லைக்கித் தொலைக்கும் நம் காய்ந்துபோய்கிடக்கும் ஆண் சமூகமும் பெண்களின் புகைப்படங்களை "அஹோ", "ஒஹோ" "சூப்பர்", "க்யூட்" என பாராட்டித்தள்ளி ஜொள்ளு மழையுடன், லைக் மழையையும் பொழிந்து தள்ளி விடுகிறோம்.

லைக்குவதோடு மட்டும் நில்லாமல் சில நல்ல உள்ளங்கள் பெண்களின் புகைப்படங்களை மார்ப்பிங்க் எனப்படும் அந்த " தலை மாற்றி - உடல் மாற்றி வித்தையை" பிரயோகித்து ஆபாசமாக சித்தரித்து வக்கிர புத்தியோடு வலம்வர வைத்துவிடுகிறார்கள்.

ஒருகாலத்தில் பொதுக்கழிப்பிட சுவர்களில் கரியாலும், ரயில் கழிவறைகளில் பேனாவாலும், குறிகளையும், குறியீடுகளையும் வார்த்தைகளையும் , பிடிக்காத பெண்களின் மொபைல் எண்களையும், காதலை மறுத்த பெண் பிள்ளைகளின் மொபைல் எண்களையும் விபச்சாரத்திற்கு அணுகவும் என்கிற மாதிரி கிறுக்கி வைத்த கூட்டம் தான் நாம் என்பதை நவீன வடிவில் பறைசாற்றத்துவங்கியுள்ளோம் !! வாழ்க பாரத சமுதாயம் !

பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த நாசமாய்ப்போன கல்வி முறையில் நல்லொழுக்கத்திற்கும், நீதி போதனைக்கும், ஆண்களுக்கு பெண்களை மதிப்பதற்கும், பெண் பிள்ளைகளுக்கு காமவெறியர்களிடமிருந்து எச்சரிக்கையாக நடந்துகொள்வதற்கும் பாடங்கள் அமைத்து பாடதிட்டத்தில் பங்கு கொடுக்க வேண்டும், அப்போது தான் இந்த நிலைமை சிறிதளவேனும் மாறும். :/

சரி பேஸ்புக்கில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளைப் பார்க்கலாம்.

முக்கியமான முன்னெச்சர்க்கைகள் :

1. உங்களது உண்மையான புகைப்படத்தை profile படமாக வைக்கலாம் தவறில்லை, ஆனால் அதற்கு முன் "only me" என்கிற ஆப்சனை தேர்வு செய்து பகிரவும். ( இதை எப்படி செய்வது என அறிய இந்த பதிவை க்ளிக் செய்து வாசிக்கவும்)

2. உங்கள் புகைப்படத்தை தனியாக பதியாமல் ஒரு கொலாஜாக (பல புகைப்படங்களை சேர்த்து ஒரே படமாக) செய்து பதிவேற்றும் போது அதன் பிக்ஸல் க்ளேரிட்டி குறைவாகும்.பிக்ஸல் க்ளேரிட்டி குறைவான படங்களை பெரும்பாலும் மார்ப்பிங்க் கில்லாடிகள் விரும்புவதில்லை. 

3. அறியாத நபர்களின் friend Request களை ஏற்க வேண்டாம்.

4. உங்கள் ஈமெயில் ஐ.டி. மொபைல் எண் போன்றவைகளை பொதுவில் வைக்க வேண்டாம்.

step 1: உங்கள் டைம்லைனிற்கு சென்று About என்பதை க்ளிக் செய்க -> பின்பு contact and basic info என்பதை செலக்ட் செய்யவும்.
step 1

step 2: பின் மவுஸ் கர்சரை மொபைல் எண் அல்லது ஈமெயில் அருகே கொண்டு சென்றால் edit என்ற எழுத்து வரும் அதை க்ளிக் செய்க.

step 3:  அதில் only me என்பதை செலக்ட் செய்து "save changes கொடுக்கவும்.
step 3
ஈமெய்ல் ஐ.டி மற்றும் மொபைல் எண் இரண்டிற்கும் only me கொடுத்து save changes கொடுத்துவிடவும்.

5. உங்களது நன்பர்கள், ஃபாலோவர்  பட்டியலை மறைத்து வையுங்கள் (எப்படி என்பதற்கு இந்த பதிவை வாசியுங்கள்)

6. உங்களது பேஸ்புக் பாஸ்வேர்டை வேறு யாருக்கும், நன்பருக்குக்கூட கூற வேண்டாம், அப்படியே கூறினாலும் உடனடியாக மாற்றி விடுங்கள்.

7. உங்களுக்கு தொந்தரவு தரும் பேஸ்புக் நபர்களை block செய்யுங்கள்

8. உங்கள் புகைப்படங்களை பகிரும் போது பொதுவில் பதிய வேண்டாம். யாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ , அவர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


தொடரும்.....



Refrence:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1552386
http://www.vikatan.com/news/coverstory/65665-should-we-be-ashamed-if-our-naked-body-is-revealed.art

Labels: ,

Saturday, November 09, 2013

பேஸ்புக்கில் டைம்லைன் அத்துமீறல்கள் : தடுப்பது எப்படி !!

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 7)

ங்கள் பேஸ்புக் டைம்லைனை ஓபன் செய்து பார்க்கிறீர்கள் !நீங்கள் போடாத போஸ்ட்கள் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத போஸ்ட்கள்,உங்களை அவமானம் செய்கிற மாதிரியான போஸ்ட்கள் உங்கள் டைம்லைன் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.,இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?...

 பிறர் நம் டைம்லைனில் பகிரும் விசயங்கள் நல்ல விசயங்களாக இருப்பின் பிரச்சினையே இல்லை, ஆனால் நம் நன்பர்கள் நம்மை கேலியாக சித்தரித்துப் போடும் புகைப்படங்கள்,கமென்ட்கள் இந்த மாதிரி வகையறாவில் வருகிற இன்னபிற விசயங்களை அவர்கள் நம் டைம்லைனில் போஸ்ட் செய்யும் போது அது நம் நன்பர்கள் பட்டியலில் உள்ள சகலருக்கும் மற்றும் நம் டைம்லைனை பார்வையிடும் எல்லா நபர்களுக்கும் காட்டப்படும் !,

 சில சமயங்களில் நாம் நமது டைம்லைன் சுவரை (Timeline Wall) திறந்த நிலையில் வைத்திருக்கும் போது அது சில எருமைகளுக்கு முதுகு சொறியும் இடமாகவும் மாற வாய்ப்புள்ளது.

சரி.., இந்த பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?


இந்த பிரச்சினைக்கு தீர்வளிக்கும் விதமாக facebook -ன் Timeline and Tagging செட்டிங்க்ஸ் உதவுகிறது.

படி:1 உங்கள் பேஸ்புக்கில் "கியர்" படத்தை க்ளிக்கி settings க்குள் நுழைந்து கொள்ளுங்கள் (காண்க: படம் 1)
படம் 1 செட்டிங்க்ஸ் செல்லுதல் 
படி:2 பின் இடதுபுறம் இருக்கும் பட்டியலில் Timeline and Tagging என்றிருக்கும் ஆப்சனை க்ளிக் செய்யவும்.



படி3: இப்போது உங்களுக்கு கீழுள்ள படத்தில் உள்ள மாதிரி செட்டிங்க்ஸ் பக்கம் காட்டப்படும்.இங்கு தான் நாம் நமது அமைப்பு மாற்றத்தை (settings change)  செய்ய இருக்கிறோம்.

  
 இதன் தமிழ் வடிவத்தினை கீழுள்ள படத்தில் தந்துள்ளேன், விளக்கம் இன்றியே விளங்கிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். (விளக்கம்  வேண்டின் தயங்காது கமென்டிலோ, மெயிலிலோ கேளுங்கள்.)




இந்த செட்டிங்க்ஸ் மூன்று வகையாக பிரிக்கப்படிருக்கிறது.

பிரிவு 1 :

இதில் மூன்று விசயங்களை அவதானிக்க முடியும்:

  1. "who can post on your Timeline " பிரிவில் நீங்கள் உங்கள் நன்பர்களையோ ,அல்லது only me ஆப்சனையோ தேர்வு செய்ய முடியும், only me கொடுத்தீர்கள் என்றால் யாரும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் போட முடியாது,போஸ்ட் இட முயல்பவர்களுக்கு பேஸ்புக் "இவர்கள் டைம்லைனில் போஸ்ட் செய்ய இயலாது" என அறிவிப்பு காட்டும்

  1. Friends என்று தேர்வு செய்து, அதன் கீழுள்ள   review ஆப்சன் "off" (Disable) என்று கொடுத்தால் ,உங்கள் நன்பர்கள் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் இட முடியும்

  1. Friends என்பதை தேர்வு செய்து விட்டு ,அதன் கீழுள்ள review ஆப்சன் "on" (Enable) என்று கொடுத்தால்.உங்கள் நன்பர்கள் டைம்லைனில் சேர்க்கும் விசயங்கள், நேரடியாக உங்கள் டைம்லைனில் காட்டப்படாது, அவை உங்களின் உத்தரவிற்காக காத்திருக்கும், நீங்கள் "டைம்லைனில் காட்ட" அனுமதி கொடுத்தால்,அது டைம்லைனில் போஸ்ட் ஆகும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டும் காட்டப்படும்.( இந்த ஆப்சன் தான் எனது Choice ).





உங்கள் நன்பர் டைம்லைனில் செய்த போஸ்ட்கள்,நேரடியாக காட்டப்படாது,உங்களுக்கு "Notifications" காட்டப்படும் . அதே மாதிரி நீங்கள் பின்வரும் முறையிலும் உங்கள் நட்புகள் செய்துள்ள "டைம்லைன் போஸ்ட்களை" பார்க்க முடியும்.

படி1: டைம்லைனிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்
படி2: பின் Update info அருகில் இருக்கும் Activity Log ஐ க்ளிக்குங்கள்




படி3:பின் Timeline Review ஆப்சனை க்ளிக்கவும்.. இங்கு உங்கள் நண்பர்கள் ,உங்கள் டைம்லைனில் செய்த போஸ்ட்கள் காட்டப்படும்...




பிரிவு 2 :

இங்குள்ள இரண்டு கேளிவிகளுக்கும் "Only me " கொடுத்துக்கொள்வது நல்லது.

பிரிவு 3 :

  • பிறர் உங்கள் மீது "Tag" செய்யும் படங்கள் உங்கள் டைம்லைனில் உடனடியாக போஸ்ட் செய்யப்படாதிருக்க இந்த ஆப்சனை "On " என்று வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்த இரண்டு ஆப்சன்களுக்கும் "Friends" என்று இருப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை : (ஒரு சின்ன Recap)


விவரங்கள் தெளிவாக தெரியாவிடில் படத்தை பெரிது செய்து கொள்க.
 வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

தொடரின் பிற பாகங்கள்:
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எசரிக்கைபேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

Labels: , ,

Monday, October 14, 2013

பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 6)
பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

                                                



நான் கல்லூரியில் காலம் கழித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது:
 து ஒரு கல்லூரி வேலை நாள் ( Working day) எங்கள் பக்கத்து வகுப்பு மாணவர்கள் சில பேர் அன்று மதியம் கல்லுரியை கட் அடித்துவிட்டு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர், தியேட்டரில் அவர்கள் டிக்கெட் எடுத்தது முதல் வெளியே வரும் வரையில்  புகைப்படங்களாக சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
மறுநாள்..கட் அடித்த இன்ப நிகழ்வின் சந்தோசத்தை தன் சக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் நண்பனொருவன்..
அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பகிர்வு (share) செய்துள்ளான்,அவனது அதிர்ஷ்டமோ,அவனோடு கட்டடித்த இன்னபிற நன்பர்களின் அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை நண்பர்கள் பட்டியலில் அவர்கள் H.O.D மற்றும் சில லெக்சரர்களும் அவனுக்கு இருந்துள்ளனர்.

இந்த பேஸ்புக் இருக்கிறதே இது நன்பர்கள் என்பதற்கான அர்த்தத்தையே இப்போது மாற்றி வைத்திருக்கிறது பாருங்கள் ,நன்பர்கள் பட்டியலில் வகுப்பு வாத்தியார்கள்,சக பணியாளர்,அலுவலக முதலாளி,அண்ணன்,அக்கா,தம்பிஇன்னும் எல்லா வகையினரும்.. (சில நபர்களுக்கு இவர்கள் நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பது சிறு ஆறுதல்). 
 அட இது என்ன பிரமாதம் நம்மில் அநேகருக்கு பேஸ்புக் நன்பர்கள் பட்டியலில் நண்பர்கள் மட்டும் இருப்பதில்லை,யாரென்றே தெரியாத யாராரோவெல்லாம் கூட இருக்கிறார்கள்.

சரி நாம் கதைக்கு வருவோம், நம்ம நண்பன் பகிர்ந்த அந்த "கட் படலத்து" போட்டோக்களை அவர்கள் H.O.D பார்த்து விட்டார்,அவர் இந்த மேட்டரை பிரின்ஸ்பால் வரை கொண்டு போய்விட்டார் ,பெற்றோரிடம் சொல்லுதல்,வகுப்பைவிட்டு தள்ளிவைத்தல் (suspend) என்றெல்லாம் சென்ற பேச்சு Fine னோடு முடிந்தது.

இப்படியாகத்தான் நாம் சில நேரங்களில் பகிரக்கூடாத நபர்களிடம் பகிரக்கூடாத விசயத்தை பகிர்ந்துவிட்டு பல்பு வாங்குவதும்,பகீர் ஆவதுமாக இருக்கிறோம்.

நாம் சேர் செய்யும் தகவல்கள் யார்யாருக்கு தெரிய வேண்டும், யார்யாருக்கு தெரியக்கூடாது என்று நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையை பேஸ்புக் நமக்கு வழங்குகிறது, இது பற்றி இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் கூறியிருந்தேன்.
இதேவகையில் நம் நன்பர்களை வகைப்படி அதாவது தெரிந்தவர்,தெரியாதவர்,நன்பர்,ஊர்க்கார்ர்,உறவுக்காரர் என நன்பர்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு பிரித்து வைக்கும் உரிமையையும் வழங்குகிறது.

அதெப்படி என்பதை பார்க்கலாம்...

படி 1: உங்கள் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் லாக்-இன் ஆகி ,டைம்லைனுக்கு செல்லவும்


படி 2:: பின்பு Friends என்பதை கிளிக் செய்து நண்பர்கள் பட்டியலுக்குள் சென்று கொள்ளுங்கள்



படி 3:  உங்கள் நண்பர்கள் பட்டியல் இப்போது உங்களுக்குக் காட்டப்படும்.

படி 4 : இங்கு நீங்கள் உங்கள் நண்பர்கள் பெயருக்கு அருகே இருக்கும் friends என்ற வார்த்தையை க்ளிக்கினால் கீழுள்ள மாதிரி ஒரு மெனு பட்டியல் வரும்.
                      

இந்த மெனு பட்டியலில் "close friends" (நெருங்கிய நண்பர்கள்) "Acquaintances "  (தெரிந்தவர்கள்), நீங்கள் வேலை பார்க்கும் அலுவலக பெயர்,நீங்கள் படித்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்த பள்ளி,கல்லூரி பெயர் போன்றவை Default ஆக இருக்கும். குறிப்பிட்ட வகையில் க்ளிக் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட நண்பரை குறிப்பிட்ட பட்டியலில் சேர்க்க முடியும்.
(**குறிப்பிட்ட நபரை நண்பர் பட்டியலிலிருந்து தூக்க Unfriend செலக்ட் செய்யவும்,பேஸ்புக்கில் புகார் செய்ய Report/block செலக்ட் செய்யவும்)


அந்த நண்பர் எந்த வகையிலும் சிக்கவில்லை என்றால் " add to another list" என்ற ஆப்சனை செலக்ட் செய்து, பின் வரும் New list பெட்டியியில் நீங்களாக பெயர் கொடுத்து புதிய நண்பர்கள் பட்டியலில் அவரை சேர்க்கலாம்.

நீங்கள் உருவாக்கிய நண்பர்கள் பட்டியல்கள் groups,pages,fav போன்ற வகையறாக்களுடன் பேஸ்புக்கின் இடது ஓரத்தில் இருக்கும்  ,
                      
அதை க்ளிக்கினால் குறிப்பிட்ட அந்த பட்டியலில் உள்ள நபர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்,படங்கள் போன்றவைகள் மட்டும் காட்டப்படும்.

ஒரு உதாரணம்



இங்கு வலதுபுறம்(Right) உள்ள பெட்டியில் நன்பர்கள் பெயரை டைப் செய்து பட்டியலில் பங்காளராக்கலாம்.
                
 மேற்கண்ட வழிமுறைகளின் படி பட்டியலை உருவாக்கியவுடன் . அந்த பட்டியலில் இணைக்கப்படவேண்டிய இன்னபிற நண்பர்கள் பெயரை இங்கு டைப்பி "பட்டியலில்" சேர்க்க முடியும்.இப்படியாக பட்டியலை நிறைப்பது எளிய முறை.

நீங்கள் பகிரும் தகவல்களும் "Custom list " (பட்டியல் நபர்களுக்கு) மட்டுமே பகிரப்படும்.

இத்தொடரின் அனைத்து பாகங்களும்:

1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எச்சரிக்கை: பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகின்றன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

அடுத்தப்பதிவை விவாத மேடை வடிவில் வாசகர்களின் கருத்துக்களோடு எழுதலாம் என விழைகிறேன்,பேஸ்புக் பற்றிய தங்களின் கருத்துக்களை தவறாது கூறுங்கள் அன்பர்களே !!
 vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ சொல்லலாம்.அடுத்தப்பதிவில் அவை பிரசுரிக்கப்படும்.

Labels: ,

Friday, August 30, 2013

பேஸ்புக்கும் பெண்களும் -(பாகம்-5)

பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

( இது ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை...)

அனு மற்றும் ரமேஷ், இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கை கோர்த்து  ஒரு மாதமும்  10 நாட்களும் மட்டுமே கழிந்திருந்தது .,இருவருமே படித்தவர்கள், நவயுக ஆண் பெண் பெரும்பான்மையானவர்கள் அனைவருக்கும் இருக்கும் அந்த ஆன்லைன் அக்கவுன்ட் அவர்கள் இருவருக்குமே இருந்தது. ,கணவன் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் இஞ்சினியர், இவள்  திருமணத்திற்கு முன்பு ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள தனியார் கம்பேனியில் சூப்பர்வைசராக பணி செய்தவள், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டாள் !!

அந்த சம்பவம் நடக்கும் வரையில் அவர்களது வாழ்க்கை சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது
ஆணாதிக்கம் என்கிற விசயத்தின் நாகரிக வடிவமாக சில ஆண்கள் தங்கள் மனைவியின் ஆன்லைன் அக்கவுன்ட் அத்தனைக்குமான பாஸ்வேர்டை வாங்கி வைத்துக்கொள்ளும் நடைமுறை தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது,ரமேஷ் தன் மனைவியின் பேஸ்புக் பாஸ்வேர்ட் மற்றும் மெயில் பாஸ்வேர்ட் போன்றவைகளை அறிந்து வைத்திருந்தான்,அவ்வப்போது அவள் ஆன்லைன் கணக்குகளில் நுழைந்து அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் !
அனுவின் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் நுழைந்து அவளது டைம்லைனை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான் ரமேஷ்

வளரா மனம் கொண்ட வளர்ந்த ஆண்கள் பட்டியலில் ரமேஷ் பெயரும் இருந்திருக்க வேண்டும் ,அன்று அவன் அனுவின் பேஸ்புக் டைம்லைனில் அந்த புகைப்படத்தை பார்த்தபோது  அவன் கண்களில் அப்படி ஒரு குரூரம், மனம் முழுக்க கோப நெருப்பு, சந்தேக ராட்சசனிடம் சரண் புகுந்தான் ரமேஷ்.

அந்த புகைப்படத்தில் அனு ஒரு ஆண் நன்பருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருந்தாள்...

ரமேஷ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான் .

வீடு திரும்பிய ரமேஷ் அனுவிடம் அந்த புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறான் !!

ரமேஷ்: யாருடி இவன் ??

அனு     : இவரு எங்க ஆபீஸ்ல என் கூட வேலை பாத்தவர்

ர: ஆபீஸ்ல வேல பாத்தவரா? என்னடி அவரு

அ: இல்லைங்க அவரு எங்க  ஹெட் சூபர்வைசர்

ர: கூட வேலை பாக்குறவன் னா கூட போயி ஒரசிட்டு நிப்பியா

அ: இல்லைங்க எங்க ஆபிஸ்ல பங்க்சன்-அப்ப எடுத்த போட்டோ அதான் எல்லாரும் சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம் !

ர:எல்லோரும் சேர்ந்து நின்னு எடுத்தீங்க சரி, அதென்ன இவன் கூட மட்டும் தனியா சேர்ந்து ....ம்ம்ம்ம் சொல்டி

அ: அவர் என் ஃப்ரன்ட் ங்க !! அதான் 

ர: ஃப்ரண்ட் னா... *****

அ:  இத பாருங்க இப்டி எல்லாம் பேசாதீங்க..

ர: அப்டி தான்டி பேசுவேன் **** ****

அ:  ...(அழத் துவங்குகிறாள் அனு)

இந்த விவாதத்திற்கு பிறகு ரமேஷ் அனுவின் அம்மா மற்றும் அப்பாவிற்கு போன் செய்து அவர்கள் மகள் பற்றி தவறாக கூறி வைக்கிறான்.

ஆவடி அருகிலுள்ள அனுவின் தாத்தா வீட்டில் சமரச பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சண்டையை துவங்கி வைக்கிறான் ரமேஷ் !! அனு அழுவதை தவிர எதுவும் செய்ய முடியாமல் அழுதுகொண்டே இருக்கிறாள்.

யார் சொல்லும் சமாதானத்தையும் கேட்க தயாராய் இல்லாத ரமேஷ் அனுவை திட்டியபடியே இருக்கிறான். "இனிமே இவ கூட ஒரு நிமிசம் கூட என்னால வாழ முடியாது..."

எல்லோரும் சேர்ந்து சமாதானம் பேசி அனுவை அவனுடன் அனுப்பி வைக்கிறார்கள்..

அன்று இரவு...

அவள் மனம் முழுக்க ஆயிரமாயிரம் கேள்விகள், ஒரு பெண்ணுக்கு ஆண் நன்பர்கள் இருப்பது தவறா?, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ஒருவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்வது தவறா?...
அழுகைக்குள் தன்னை அழுத்திக்கொண்டு  கண்ணீரை கன்னத்தில் வழித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் அனு..

அடுத்தநாள் காலையில் நீயூஸ் பேப்பரில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருந்தது!!



இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி... அடுத்தப்பதிவில் சொல்கிறேன்...

.முந்தைய பதிவுகளை வாசிக்க தலைப்பை க்ளிக் செய்யுங்கள்                                                           
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை

வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

Labels: , , ,