Sunday, January 01, 2017

பெண் கட்டிய காதல் மாளிகை : ஊர் சுற்றியின் குறிப்புகள் -2

ஊர் சுற்றியின் குறிப்புகள் -2 

@  சந்திரப்பூர், மகாராஷ்ட்ரா

இந்த சந்திரப்பூர் நகரத்தில் இத்தனைப்பெரியதாய், பிரம்மாண்டமாய் ஜர்பத் நதிக்கரை ஓரமாக இத்தனை கவித்துவமாக , அன்ச்சாலேஸ்வரர் கோவிலுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் இந்த கட்டிடம் பெண்ணொருத்தி கட்டிய  காதல் நினைவுச்சின்னம் என்பதை அறிந்த போது, இது பற்றி கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். 

ராஜா -ராணி கதை

காதல் கோட்டை        

முன் குறிப்பு:
கடந்த பதிவில்  சந்திரப்பூர் நகரம் சுற்றி பரவியிருக்கும் சுவரின் கதையையும், அன்ச்சாலேஸ்வரர் கோவிலின் கதையையும் எழுதியிருந்தேன். நாய் ஓடுச்சாம், முயல் துரத்துச்சாம் இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு என சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன,  வளர்ந்துவிட்ட நகர மனிதர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனங்களை தொட்டுச்சீண்டும் விரல்களாய் இருக்கின்றன. முயல் துரத்தியதா, நாய் ஓடியதா, உண்மையிலேயே ராஜா பல்லார்ஷா தான் அந்த சுவரை நிர்மாணித்தானா? என்றெல்லாம் நானும் பார்த்ததில்லை தான் , ஆனால் ஊரைச்சுற்றி சுவர் இருக்கிறது, மக்களிடையே இந்த கதையும் இருக்கிறது.

ராணி கட்டிய நினைவுச்சின்னம்:


இந்திய வரலாற்றிலேயே இந்த வகையிலான கட்டிடம் இது ஒன்று மட்டும் தான், (உலகிலேயே என்று சொல்லலாமா என தெரியவில்லை !!). ஒரு பெண் ஆணுக்கென்றொரு நினைவுச்சின்னத்தை கட்டியுள்ள கதை எனக்கு புதியதாய் இருந்தது.

மன்னர்களின் பட்டியல்

 ராணி ஹிராய் :பட்டியலில் 17 வதாக இருக்கும் வீர்ஷா வின் (Bir sah - என்று இருக்கிறது, வெள்ளைக்காரனுக்குத்தான் நம்ம மொழி நாக்குல வராதே. ) மனைவி. ராணி ஹிராய் - வீர்ஷா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இல்லை, ஒரேயொரு மகள்.

குழந்தைப்பருவம் கடந்து குமரியாகிவிட்ட பிறகு இளவரசியை சந்திரப்பூரின் அருகேயிருக்கும் தேவ்காட் என்கிற ஊரின் இளவரசன் துர்க்காஷாவிற்கு மணமுடித்துக் கொடுக்கின்றனர். அவன் இளவரசிக்கு தொடர்ந்து தொந்தரவுகள் தரவே தந்தையிடம் வந்து முறையிடுகிறாள் மகள், படையெடுத்துச் சென்று பலிதீர்க்கிறான் வீர்ஷா. படையெடுத்து பலிகொண்ட துர்க்காஷாவின் தலையை சந்திரப்பூரிலுள்ள மகா காளிதேவிக்கு படையலாக வைக்கிறான். (வீரம் என்பதா விசித்திரம் என்பதா !).
 
ராஜா வீர்ஷா அவுரங்கஷீப் காலத்தில் நடந்த ஒரு மொகலாய  படையெடுப்பில் , ராஜா வீர்ஷா தனக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரமது. ராஜபுத்திர மன்னன் ஹிராமனால் கொல்லப்படுகிறான் .

ஹிராய்-வீர்ஷா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் 1704  முதல் 1719 வரை 15 வருடங்கள் அவளே ஆட்சிப்பொறுப்பை கையிலேற்றுக்கொண்டு சந்திரப்பூரை ஆட்சி செய்ய துவங்கினாள். (1691 ல் ராம்ஷா என்கிற சிறுவனை தத்தெடுத்து அவனை அரியணை ஏற்றிவைத்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன). 15 வருடங்களுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை தமது தத்துமகன் ராம்ஷாவிடம் ஒப்படைத்துவிடுகிறாள்.

அவளது ஆட்சி காலத்தில் அவள் தனது கனவனுக்கென  ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுகிறாள். அழகிய கலை வேலைப்பாடுகளுடன், சிற்பங்களுடன் கூடிய அந்த காதல் மாளிகையை கட்டுகிறாள்.

சுற்றிலும் மதில் சுவர்களுடன் பெரிய அழகிய மாளிகைபோல இருக்கிறது ராஜா வீர்ஷாவின் சமாதி.

இந்த மாளிகையின் நுழைவுவாயிலில் இருக்கும் கிளியின் உருவம்,பூ வேலைப்பாடுகள் மற்றும் கல்லில் நுணுக்கமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்த ஜன்னல்கள் , கட்டிடத்தின் மீது ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

மகராஷ்ட்ரத்திலேயே ஒரு ராஜாவுக்கு என  அமைந்த மிகப்பெரிய நினைக்கட்டிடம் இது தான் . அது மட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு பெண் தனது காதலின் நினைவாக எழுப்பிய நினைவுக்கட்டிடம் இது மட்டும் தான்.



வீர்ஷாவின் சமாதி (long shot)
வீர்ஷாவின் சமாதி (close up shot )

மஹாகாளி மந்திர்:


                                    


அதன் பிறகு தனது கனவன் துர்க்காஷாவின் தலையை பலியாக கொடுத்த அந்த மகாகாளி தேவியின்  கோவிலையும் மறுசீரமைப்பு செய்து கட்டுகிறாள். அந்த கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், வாயிற்கதவுகளும்,ஜன்னல்களும் அழகிய கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறன .



ாணி ஹிராய் கட்டினாகாளி கோவில்

மகாகாளி கோவிலில் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது, நம்மூர் காளி கோவில்கள் மாதிரியே கெடா ,சேவல் வெட்டி சோறு பொங்க கூட்டம் கூட்டமாக கூடமெங்கும் மக்கள் கூடியிருக்கிறார்கள்.மாவிளக்கு போடுகிறார்கள். 
சுயம்பு உருவில் மஹாகாளி அம்மன்
இந்த மகாகாளி அம்மன் இருக்கும் கர்பகிரகம் நிலத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. படியிரங்கி, தலைகுனிந்து உள்ளே சென்றுதான் அம்மனை தரிசிக்க முடியும். (தலைவணங்கி உள்ளே சென்றால் தான் காளியின் தரிசனம் ).
உறங்கும் அம்மன் : நித்ரா தேவி
இந்த கோவிலில் சுரங்கப்பதை போன்று பாதை வழியாக சென்றால் இன்னுமொரு அம்மன் சிலை உள்ளது உறங்கிய நிலையில். இவளை உறக்கத்தின் கடவுள் என சொல்லுகிறார்கள்.(இந்த சுரங்க வழி காலையிலும் ,மாலையிலும் மட்டுமே திறக்கப்படுகிறது,மதியான நேரத்தில் பூட்டப்பட்டு இருக்கும்).

மஹாகாளி கோவில் சுவர் ஓவியம்
ாகாளி கோவிின் உத்ிரம் ிக்க:  ல்ேலைப்ப


தனது  கனவனின் நினைவாக நினைவு மாளிகை கட்டி, கனவனின் வெற்றிச்சின்னமாக காளிகோவிலைக்கட்டி வீரமங்கையென சந்திரப்பூரை ஆட்சி செய்த அந்த ராணி ஹிராய் யியை மனதில் நினத்து வியந்தபடியே அந்த கட்டிடத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்.

காதல்- கோட்டைச் சிற்பங்கள்




பின் குறிப்புகள்: 
 
ராணி ஹிராயி கட்டிய காதல் கோட்டை பராமரிப்போ,பாதுகாப்போ இல்லாமல் கிடப்பதால் காதல் பறவைகள் சில தங்கள் நினைவுக்குறிப்புகளையும், ஹார்ட்டின் அம்பு சகிதமாக தங்கள் பெயர்களையும் இந்த கட்டிட சுவர்களில் கிறுக்கி வைத்துள்ளன.

ஆள் அரவமற்ற ஊர் ஒதுக்க பகுதியாக இருப்பதால் சிலபல ஜோடிகள் இங்கு கட்டிட மறைவுகளில் கைகோர்த்தபடி காட்சியளிக்கிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த கட்டிடம் சீண்டுவோர் அற்று கிடப்பது தான் மனவேதனையாக இருந்தது.
                                                                                                                                                       பயணம் தொடரும்




















...

 

Post Comment