Saturday, June 14, 2014

சிட்டுக்குருவியின் வானம் 1.2

சிட்டுக்குருவியின் வானம் 1.2

கவர்ச்சியும்... காரணமும்...

 வளோ ஒருத்திகாட்டுகிற கவர்ச்சிக்கும் எவளோ ஒருத்தியின் அழுகைக்கும் "மறைமுகமான ஒரு நேரடி தொடர்பு " இருக்கிறது என்று கடந்த பதிவில் புலம்பியிருந்தேன்..
இந்த விசயத்தை பெரும்பாலானோர் ஆம் என்று ஆமோதித்தாலும், அதெப்படி !! என்று கேட்கத்தான் செய்கிறார்கள் சிலர்.

அதெப்படி !!
 விளம்பரப்படங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயத்தை உங்களால் கவனிக்க முடியும்.
 ஆண்களுக்கான சேவிங்க் கிரீம், ஆண்களுக்கான Body ஸ்ப்ரே, ஆண்களுக்கான உள்ளாடை,இப்படி ஆண்களுக்கான விளம்பரங்களை ஆண்களிடம் விளம்பரப்படுத்த கவர்ச்சி என்கிற ஒரு காரணம் தேவைப்படுகிறது,
அதேசமயம் !! ,பெண்களுக்கான பொருட்களின் விளம்பரங்களில் ஆண் என்பவன் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் அவசியம் அவனுக்கு இருப்பதில்லை
 வார இதழ் ,மாத இதழ், சிறப்பிதழ் போன்றவைகளின் அட்டைப்படங்களை ஆண்களைவிட,பெண்களே அதிகம் அபகரிக்கின்றார்கள்.,கவர்ச்சி நடிகைகளுக்கு இருக்கும் செல்வாக்கு கவர்ச்சி நடிகர்களுக்கு இல்லை.

 பெண்ணை ஒரு கவன ஈர்ப்பு காரணியாக பயன்படுத்தும் வித்தையையே விளம்பர நிறுவனங்களும்,சினிமாக்களும் செய்து கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. "பெண்" கவன ஈர்ப்பு காரணியாக மாற்றப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் ?, கவர்ச்சிக்கும்,ஆணின் உணர்விற்கும் என்ன சம்பந்தம்?.இந்தியா இந்த விசயத்தில் மோசம் போக என்ன காரணம்.

 இந்த விசயங்களின் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் ,உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளை சுருக்கமாக பார்த்து விடலாம்

ஆதியாகமம்:
 
ஆதியாகமம்
 ஆதாம் என்கிற ஆண் தான் முதலில் தோன்றியவன் என்று பெரும்பான்மையான மதங்கள் முன்மொழிகின்றன.ஆனால் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்,உலகில் முதலில் தோன்றியது ஆண் கிடையாதாம் பெண் தானாம்.,
 குரங்கிலிருந்து மனிதனாக பரிணமிக்க துவங்கிய வரலாற்றில் (க்ரோமேக்னன்,நியான்டர்தால்,ஹோமோ ரொடீசியன்ஸ், ஹோமோ எரக்டஸ்,...) என்று வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த பட்டியலில் தற்காலத்திய மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸின் வித்தாக முதன் முதலில் அவதரித்தவள் பெண் என்பதற்கான தொல்லியல் சான்றுகள்,டி.என்.ஏ ஆய்வுகள் போன்றவற்றை கொண்டு " பரிணாம வளர்ச்சியில் ஆணின் முன்னோடி பெண் தான் " என்ற  தன் ஆராய்ச்சி முடிவை எடுத்துவைத்து ஆதாரத்துடன் அடித்துக்கூறுகிறது அறிவியல்.
  இன்றளவிலும் கூட உடல் முதிர்ச்சி,மனப்பக்குவம் போன்ற விசயங்களில் ஆண் இனத்தைவிட பெண்ணினமே முதலில் பரிணமிக்கிறது என்பது கண்கூடான உண்மை.(இந்த விசயத்தை பிறிதொரு பதிவில் விளக்கமாக அலசலாம்)

 ஆதிகாலத்தில் அதாவது,மனித இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலக் கட்டத்தில் தனக்கான ஆணை தேர்வு செய்யும் உரிமையை பெண்ணே பெற்றிருந்தாள் வலிய இனம் தன் மூலம் பெருக வழி வகுக்கும் விதமாக.நல்ல பலசாலியான,தனக்கு வேட்டையாடி உணவு கொண்டுவந்து தர வக்குள்ளவனாகப் பார்த்துப் பார்த்து அவள் இணை சேர்ந்தாள்.

 ஆண் இனமும் பெண் தனக்கானவனாக தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே தன்னை பலசாலியாக நிரூபிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றது

காட்டுமிராண்டி காலத்திலேயே ஆண்கள் , பெண்ணை பார்க்கிற போதெல்லாம் தன்னை வீரனாக காட்டிக்கொள்ளவும்,தான் பெண்ணை வைத்து காப்பாற்ற வக்குள்ளவன் என்று நிரூபிக்கவும், என்னவெல்லாம் வழிமுறைகள் உண்டோ அவை எல்லாவற்றையும் செய்யத்துணிகின்றார்கள்.

 நமது இந்தியக் கலாச்சாரத்தில் கூட ராமாயணம்,மகாபாரதம் போன்ற ராஜா காலத்து கதைகளில் பெண்ணானவள் வீரம்,அழகு எனப் பகுத்தாய்ந்து தனக்கானவனை தேர்வு செய்ததை பற்றிய கதைகள்  காணப்படுகின்றன.காளையை அடக்குபவனுக்கே பெண் என்கிற பழந்தமிழ் பண்பாடு கூட நம்மிடையே இருந்திருக்கிறது. உலகின் இன்னபிற பாரம்பரிய கலாச்சாரங்கள் அத்தனையிலும் வீரம் காட்டி பெண் பிடிக்கும் கதைகள் இருக்கின்றன. 
 ஆணாக பிறந்தவன் பெண்ணுக்கான பாதுகாப்பாக தன்னை நிரூபித்து பெண்ணை மணந்து கொள்ளும் காலம் அப்போது இருந்திருக்கிறது என்பதை இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது

காட்டுவாசி - நாட்டுவாசி:
 பரிணாம வளர்ச்சியில் காட்டுவாசி நாட்டுவாசியாக மாறிய பிற்பாடு," ஆண் என்பவன் பெண்ணுக்கான பாதுகாப்பு" என்கிற கருத்து ஆண் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்து விடுகிறது, நாகரிகம்,சமூகம்,அரசாங்கம் என்று முன்னேறிய பிறகு பெண்ணை பாதுகாப்பது ஆணின் கடமை என்பதாக பல்வேறு "பெண் காப்பு" சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

நம் இந்திய கலாச்சாரத்தில் பெண் பற்றிய அடிமை எண்ணங்களெல்லாம் இடையில் வந்தவைகள் ,காலச்சக்கரத்தை ரொம்ப பின் நோக்கி நகற்றுகிறபோது நம் இந்திய பண்பாட்டில் பெண்ணை அடிமை செய்யும் போக்கு இருந்திருக்கவில்லை,என்று தெளிவாக தெரிகிறது.
உலகின் அநேகமான மதங்கள் கடவுளை ஆண் பாலாக மட்டும் வைத்து அழகுபார்த்த அந்த காலத்திலேயே பெண்ணை தெய்வமாக வழிபடும் சாக்தம் என்ற சக்தி வழிபாடு இங்கு இருந்திருக்கிறது.நதி,கடல்,பூமி போன்றவைகளுக்கு பெண் பெயரிட்டு தாயாக காணும் பண்பாடு இருந்திருக்கிறது,பெண்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை,ஆணுக்கு போட்டியாக வாதம் , தர்க்கம் போன்ற போட்டிகளில் பங்கேற்று அவனை தோற்கடிக்கும் அளவுக்கு அறிவாற்றல் இருந்திருக்கிறது... 
" தையல் சொல் கேளீர் " என்று ஒரு பெண்ணே சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கிறது.
நீதி மறுக்கப்பட்ட தன் கனவனுக்காக தானே சென்று வாதாடி சண்டைபோட்டு ஒரு நகரத்தையே தீமூட்டும் அளவுக்கு வீரமும்,திராணியும்,வாய்ப்பும் இருந்திருக்கிறது..


 காலம் நகர நகர ...

 இந்திய நாகரிகத்தில் , பெண் என்பவள் ஆணின் நிழலிலேயே வாழ வேண்டிய உயிரினம்.அவளுக்கென்று சுதந்திர எண்ணங்கள் இருக்கக்கூடாது.இருந்தால் தவறு ,பிறந்த பின் தந்தையின் பராமரிப்பில் தந்தையின் கருத்துகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவளாக வளர்ந்து, வளர்ந்த பிறகு கனவனின் பராமரிப்பில் பணிவிடை செய்து,கனவனே கண்கண்ட தெய்வம் என்று அவன் சொல்வதன்படியே வாழ்ந்து தன் காலத்தை கழிக்க வேண்டியவளாக  இருக்க வேண்டும்.(கனவன் இறந்தவுடன் அவனை எரிக்க மூட்டப்பட்ட தீயிலேயே அவளும் விழ வேண்டும் என்ற வழக்கம் கூட இருந்திருக்கிறது).

இவைகளெல்லாம் பின் எப்படி நம்மவர்களிடையே வந்திருக்கும் !

                                             சிட்டுக்குருவி சிறகடிக்கும்...


 லேபில்கள்: பெண் அடிமையானது ஏன்,இந்தியாவில் பெண்கள் நிலை,உடன் கட்டை ஏறும் வழக்கம்,பெண்கள் நிலை,ஆண்,பெண்,காமம்,அறிவியல் பின்னனி,மனோதத்துவம்,சைக்காலஜி,ஆண் பெண் நிலை,இந்தியப்பெண்,பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,ஆதாம் ஏவாள்,ஹோமோ சேப்பியன்ஸ்,விளம்பரம்,பாலிவுட்

Labels: ,

Saturday, September 14, 2013

சிட்டுக்குருவியின் வானம் 1.1

சிட்டுக்குருவியின் வானம் (1.1)
எவளோ ஒருத்தி  !!
   எங்கே பார்த்தாலும்,எந்தப் பக்கம் பார்த்தாலும் எவளோ ஒருத்தி எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அரைகுறை ஆடையுடனோ,ஆள் மயக்கும் புன்னகையுடனோ,பகிரங்கமான அங்க அரங்கேற்றத்துடனோ கண்டவனின் கண்களை மட்டுமின்றி கண்டவனையே கொள்ளை கொள்வது மாதிரி...

  சுவர் வரைபடமாக, வாரப்பத்திரிகை அட்டைப்படமாக, சினிமா போஸ்டராக விளம்பர பேனராக,கவர்ச்சி நடிகையாக,ஹீரோயினாக,மாடலிங்க் மங்கையாக ,இன்னும் உள்ள ஏதோ ஒன்றாக எவளோ ஒருத்தி எப்போதுமே என் பார்வையில் மட்டுமின்றி எல்லோரது பார்வையிலும் பட்டுக்கொண்டே இருக்கிறாள் முந்தின பத்தியில் பார்த்த மாதிரியாக..

   ஆண்களுக்கான செருப்பு விளம்பரம்,ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரம் ,என்று பெண்கள் தேவையே இல்லாத விளம்பரத்துக்கு கூட  விளம்பரத்துக்காக அரைகுறை ஆடை அணிந்த அம்மணி ஒருத்தி தேவைப்படுகிறாள்.
  உங்கள் வீட்டில் பழைய வார ,மாத இதழ்கள் இருக்க கூடுமானால் அதை பரப்பிப் போட்டு ஒரு பார்வை இடுங்கள், முக்கால் வாசியில் அந்த "எவளோ ஒருத்தி" இருந்தே தீருவாள்.
அட்டைப்பட அழகிகள்

   அதெல்லாம் சரி...
  "எவளோ ஒருத்தி எப்படி இருந்தாள் உனக்கென்ன வந்தது?"  என்று நீங்கள் என்னைக் கேட்க முயலலாம் ., இதே கேள்வியை நானும் கூட என்னிடம் கேட்கத்தான் செய்கிறேன்!, என்ன செய்ய?? , நம்மவர்கள் மோசம் போய் கிடக்க  அந்த "எவளோ ஒருத்தி" மறைமுகமாக நேரடி காரணமாக இருக்கிறாள் எனும் போது கேள்வி கரைந்து காலியாகி விடுகிறது!!
எவளோ ஒருத்திக்காக நான் ஏன் புலம்ப வேண்டும் !!!...
 சமீப காலமாக செய்தி தாள்களில் வெளியாகும் செய்திகளில் சிலவற்றை என்னால் வாசிக்க  முடிவதே கிடையாது,தலைப்பே தடுமாற செய்து விடுகிறது,.
கற்பழிப்பு,பாலியல் வன்முறை, தற்கொலை.. 
 சில சமயம் தவறிப்போய் செய்திக்குள் நுழைந்தால் கோபப்படவும், வருத்தம் கொள்ளவும்,அடுத்தவரிடம் அந்த செய்தியைக்காட்டி ஆதங்கப் படவும் மட்டுமே என்னால் முடிகிறது என்று என் மீதே கோபம் கோபமாக வருகிறது.,
   யாரோ ஒருவரின் வாழ்வில் ஆணிவேரையே பிடுங்கும் படியாக இருக்கும் அந்த அதிர்ச்சி செய்திகளை என்னைப்போலவே நம்மில் பெறும்பாலானோர்,காபி,டீ,அரட்டை என அசல்டாக கடந்துவிடத்தான் செய்கிறோம் தினம் தினம்...
   முகமறியாத எவளோ ஒருத்தியின் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு பின்னால் அரைகுறையோடு கவர்ச்சியாக அங்கம் காட்டும் முகம் தெரிந்த அந்த எவளோ ஒருத்தியின் சிரிப்பு இருக்கத்தான் செய்கிறது, நானோ,நீங்களோ இல்லையென்று அடித்துக் கூறினாலும் கூட..

பாரத மாதா அழுது கொண்டிருக்கிறாள்...
                  
(இன்னும் பார்க்கலாம் விரிவாக...)

                                               சிட்டுக்குருவி சிறகடிக்கும்

படங்கள் உதவி:
1.http://www.canada.com/story.html
2.indiatimes.com
3.http://dinasarinews.blogspot.in/2013/07/12.html

Labels: , , , ,

Wednesday, September 11, 2013

சிட்டுக்குருவியின் வானம் (0)


து நாள் வரை உங்களுக்கு தொழில்நுட்பக்கட்டுரைகள்,மற்றும் சிற்சில கவிதை,கட்டுரைகள் என்று அறிமுகமான நான் ,சிட்டுக்குருவியின் வானம் என்ற இந்த தலைப்பின் கீழ் இதுவரை பேசாது விட்ட சில விசயங்களை  பேசலாம் என்றிருக்கிறேன்...

ந்த சின்னச் சிட்டுக்குருவிக்கு இறக்கைகள் சிறியது தான் என்றாலும் அதற்கு,வானத்தில் பறக்கத்தெரியும் .வானத்தின் நிழல் பல நேரங்களில் அதன் பயணங்களில் , அந்த குருவியின் மீது விழத்தான் செய்கிறது,புல் மீதிருக்கும் பனித்துளிக்குள் காடு ,மலை,வானம்,வீடு என சகலமும் உள்ளடங்கி பிரதிபலிப்பது மாதிரி இந்த சிட்டுக்குருவியின் சிறிய கண்களுக்குள் இந்த வானம் முழுக்க அடங்கியிருக்கிறது என்பதை அது நம்புகிறது..அது உண்மையா பொய்யா என்கிற வியாக்கியாயங்களுக்குள் நுழைய வேண்டிய அவசியங்கள் தேவையில்லை,ஏனென்றால் அது இந்த சிட்டுக்குருவியின் தனிப்பட்ட எண்ணம்.

"பரந்துவிரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லோரையும் போல... எல்லாவற்றையும் போல.. நானும் ஒரு சிறுதுகள்"

ந்த வார்த்தை கோர்வைதான் நான்  என்னைப்பற்றி (about me) என்கிற இடத்தில் இந்த வலைப்பூவை ஆரம்பித்த அன்றைய தினத்தில் முதன்முதலாக டைப்பிய வரிகள்

ந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நொடித்துளியும் ஆச்சரியங்களாலும்,பிரமாண்டங்களாலும்,பிரமிப்புகளாலும் மட்டுமே நிறைந்திருக்கிறது,ஒவ்வொரு விசயத்தை பார்க்கும் போதும் நிறைய நிறைய கேள்விகள்,விடைகள் கிடைத்தாலும் கூட மனம் அமைதி கொள்வதில்லை,விடைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் வினா விதை விதைக்கப்பட்டே கிடைக்கிறது போலும்,விடைகள் மீண்டும் நம்மை கேள்விகளை நோக்கி நகற்றுகின்றன...


இந்த சிட்டுக்குருவி தன் சிறிய சிறகுகளை அசைத்து பறந்து விரிந்த வானத்தின் கீழே பறந்து கொண்டிருக்கிறது.வானம் மிகப்பெரியது என்பது அந்த சிட்டுக்குருவிக்கு தெரியும் ஏனோ அது தனது சின்னஞ்சிறிய சிறகுகள் கொண்டு வானத்தை அளந்துவிட முடியும் என்று முயற்சிக்கிறது...
அடுத்த பதிவு முதல்...
நிறைய பேசலாம்..பேசாதுவிட்ட பல விசயங்களை....
                                             -சிட்டுக்குருவி சிறகடிக்கும்
லேபில்கள்:சிட்டுக்குருவியின் வானம்,விஜயன் துரைராஜ்,விஜயன்,விஜயன்துரை,vijayan,durai,vijayan durairaj,vijayandurairaj,chittukkuruviyin vaanam,கடற்கரை

Labels: , , , ,