Sunday, February 11, 2018

மின் மற்றும் மின்னணுவியல் நுட்பங்கள் - 5

அத்தியாயம்-0
-----------------------
எலக்ட்ரானைத்தேடி...

கிமு:585-ல்   எலக்ட்ரான் !

 எலக்ட்ரான்  என்ற வார்த்தை  நகைகளில் அலங்காரக்கல்லைப்போலப் பயன்படுத்தப்படும் ஆம்பர் என்னும் ஒரு வகை மரப்பிஸினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட  கிரேக்க வார்த்தையான  ilektron   என்ற வார்த்தையிலிருந்தே பிறந்தது !

எலக்ட்ரான் நகைகள்

ஆம்பர் பிஸினுக்குள் சிக்கியிருக்கும் கொசு
ஆம்பர் பிஸின்
மரப்பிஸினுக்கும் , அணுத்துகளுக்கும் என்ன சம்பந்தம் மொட்டைத்தலையும் , முழங்காலும் போல என யோசிக்கத் தோன்றுகிறதா ! ஆம்பர் பிஸினையும், அணுத்துகள் எலக்ட்ரானையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை இருக்கிறது. எலக்ட்ரானை அடிப்படையாக வைத்து செயல்படும் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ளப்போகும் நாம் இந்த கதையை சும்மானாச்சுக்கும் தெரிந்து வைத்துக்கொள்வோம் !

 தாலஸும் எலக்ட்ரானும்

கி.மு. 585-ல்  தன்னிடமிருந்த ஆம்பர் நகைகளில் சேர்ந்த தூசியை , கம்பளித்துணியால் துடைத்து சுத்தம் செய்கிறார் கிரேக்க அறிஞர் தாலஸ். கம்பளியால் தேய்க்கப்பட்ட அந்த  ஆம்பர் பிஸின் மேலும் மேலும் தூசிகளை இழுத்ததே  அன்றி  சுத்தமான பாடில்லை, 

அந்த ஆம்பரின் அருகில் தாலஸ் ஒரு பறவையின் இறகை கொண்டு செல்கிறார் , ஆம்பர் அதனையும் இழுக்கிறது. பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்றெல்லாம் தாலஸ் இந்த நிகழ்வை முடிவுகட்டாமல்  இயற்கையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிற குறிப்போடு   "( ἤλεκτρον ) எலக்ட்ரானை   (γούνα) ஹூனாவால் தேய்க்கும் போது ஒருவித ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு அது தூசு, இறகு போன்றவற்றை ஈர்க்கிறது என்று எழுதி வைக்கிறார்.



தூசிகளை ஈர்த்த இந்த ஈர்ப்பு சக்திக்கு என்ன காரணம் என்பது கிட்டத்தட்ட 2000 வருசங்கள் கழித்து 1800 களில் தூசி தட்டப்படுகிறது. . .




------------------------------------------------------------------- கற்போம்...
குறிப்பு: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பதிவுகளுக்கென பிரத்யேகமாக EEETamil  என்ற பெயரில்  ன்னொரு தளம் Blog ) ஆரம்பித்துள்ளேன் .

இந்த தொடரின் அடுத்த பாகம் eeetamil.blogspot.in தளத்தில் வெளியாகும். கடற்கரை வலைத்தளத்தில் வெளியாகாது, ஆகவே இந்த தொடரை தொடர்ந்து வாசிக்க விரும்பும் நண்பர்கள் EEETamil    eeetamil.blogspot.in வலைத்தளத்தில் இணைந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..
                                                                                                             - விஜயன்.துரைராஜ்

Labels: , ,

Tuesday, June 09, 2015

அதிக சம்பளம் வாங்கித் தரும் படிப்புகள் !

கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...

 ஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.

ஆனால்.,

இன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.

தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் கல்லூரி


கிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் ! இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. 

என்ஜினியரிங் என்றால் என்ன? , அதன் பயன் என்ன? என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

எஞ்சினியரின் விடைத்தாள் :) !
                              

ஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண் … மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.

இது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)

மறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.
5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.

இன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.

மற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்? சிந்தியுங்கள்….   

இந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர ஐ.டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].
                          

இதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.

ஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.

ஒரு சின்ன புள்ளிவிவரம்: (துறைவாரியாக சம்பள சதவீதம்) !

                                 

கட்டுரையாக்கம்: வினோத்குமார்.R
                   http://vinothkumar.in/


Labels: , , ,