Wednesday, August 15, 2012

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??


"அனைவரும் உறங்குகிற வேளையில் இந்தியா விழித்து கொண்டது"
-----------------------------------------------------------------------------------ஜவஹர்லால் நேரு


28 மாநிலங்கள்
யூனியன் பிரதேசங்கள்
18 ஆட்சி மொழிகள்
325 மொழிகள், 1652 கிளை மொழிகள்
1.10 பில்லியன் மக்கள்
பல்வேறு மதங்கள்
பல ஆயிரம் ஜாதிகள்
பல்வேறு நாகரிகங்கள்
என பல்வேறு வண்ணங்களின் கலவையின் உருவமாக நிற்கும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசு
நம் இந்தியா

 இந்த இனிய நாளில் சுதந்திர இந்தியா தனது 66 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதுவாசகர்களுக்கும்,நன்பர்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
 
  சுதந்திரம் என்கிற விசயம் யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடிய ஒன்றோ,அல்லது யாரிடமிருந்தும் பெருகின்ற ஒன்றோ கிடையாது.அது ஒரு தன்னிச்சையான உணர்வு.அடிமையாக இருக்கின்ற போதும் கூட ஒருவர் சுதந்திர உணர்வுடன் இருக்க முடியும். அதே நேரம் ஒருவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டாலும் கூட அடிமை உணர்வுடன் கூட ஒருவர் இருக்க முடியும். அடிமைபட்டு கிடந்த காலத்திலும் கூட பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என
ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!"
-என அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என சொன்ன பாரதியை பற்றி சிந்தித்து பாருங்கள்.
ந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என இன்றைய தினத்தின் இரவு பன்னிரெண்டு மணிக்கு வெள்ளையன் அறிவித்துவிட்டு சென்றான்.இருட்டில் கிடைத்த்தால் தான் என்னவோ இன்னமும் கூட இந்தியாவில் பல பேர் வாழ்க்கை விடியாமல் இருக்கிறது....
 ந்தியாவில் இன்றளவும் செயன்முறையில் உள்ள பல விசயங்கள் ஆங்கிலேயன் தந்த அருட்கொடையே!கல்வி,அரசியல்,சட்டம்,அரசு வேலை வாய்ப்புகள் போன்ற பல விசயங்கள் அவன் தந்த அடிப்படைய்லேயே தான் இன்றும் இருக்கின்றன அந்நியன் தந்த விசயங்களை அப்படியே பயன்படுத்தும் நமக்கு சுதந்திர உணர்வு சுயமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு தான்.!

 "நம் இந்தியர்களில் பலர் விளையாட்டு விசயத்தில் தேசப்பற்றுடன் இருக்கிறோம்,ஆனால் தேசிய விசயங்களில் விளையாட்டாகவே இருந்துவிடுகிறோம்."

-என்று யாரோ ஒரு நபர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
அது உண்மை தான் .இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறும் வேளையில் பொங்கி எழும் நாம்,ஒரு அரசிய்ல் வாதியின் தவறான செய்கை வெளியில் தெரியும் போது வாய்மூடி கைகட்டி இருந்து விடுகிறோம்.சரி அது கிடக்கட்டு விடுங்கள்.நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??
இன்று நாம் நமது கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம் இல்லையா... இது சுதந்திரத்தின் வெளிப்பாடு தான்.

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??

 நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநல உணர்வின் அதீத தன்மையால் சுயம் கெட்டு போய் கிடக்கிறது.சுயநலம் பற்றிய சிந்தனை அதிகமாகும் போது..நாடுபற்றிய சிந்தனை குறுகி விடுகிறது சுயநல சிந்தனை மூலம் ஒருவரின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதாக நினைத்தே "சுயநல உணர்வு" உருவாகிறது,ஆனால் வாழின் பெறும்பாலான பிரச்சனைகளுக்கு "சுயநல உணர்வின்" அதீத தன்மையே காரணம்.
உங்கள் அருகில் ஒருவர் உணவின்றி இருக்கின்ற போது..உங்களிடம் நிறைவான உணவு இருந்தால் அதை முழுமையாக தானம் செய்து விட வேண்டும் என தேவையில்லை,உங்களால் இயன்ற அளவு சிறிதளவு உதவுங்கள்.
 கொடுத்தால் குறைந்து விடும் என்று சுயநல எண்ணம் சொல்லிக்கொடுக்கிறது..நல்ல மனதுடன் கொடுக்கும் எதுவும் குறந்து போவதில்லை.நான் உங்களுக்கு சொல்கிறேன்....
"கொடுக்கிற எண்ணம் உடையவர்களுக்கே நிறைய கிடைக்கும்"
  இது கொஞ்சம் முரண்பாடாக தெரியலாம்.ஆனால் இயற்கை விதி இதுதான்.
 ன்று கல்வியில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று அரசியல்வாதிகள் தம்ப்ப்ட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்... இந்தியாவில் பல உள்ளங்கள் உணவின்றி ,உறக்கமின்றிபணமின்றி,பலமின்றி இருந்து கொண்டிருக்கின்றனர்.
       
·         எங்கள் உயிர்களை.,
பசியெனும் நெருப்பு
வறுமை அடுப்பில்
உணவாய் சமைத்துக் கொண்டிருக்கிறது..
உணர்வு உள்ளவர்களே
உணவு தாருங்கள்
நாங்கள்
உணவாவதற்கு முன்னால்

கல்வியின் வாசம் அறியாத எத்தனையோ பிள்ளைகள் நம்மருகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.நம்மால் முடிந்தால் அந்த உள்ளங்கள் கல்வி பெற நாம் உதவ முடியும்.
நம் ஒவ்வொரு தேவைக்கும் பிறரையோ,அரசையோ குறை சொல்லும் போக்கை குறைத்துக்கொண்டு,நம் நிலைபற்றி நினைத்துக்கொள்வோம்,
நம்மை சுதந்திரத்தால் நிறைத்துக்கொள்வோம்.

வாருங்கள் நமக்கு கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை கொண்டாடுவோம்..கொண்டாட்டம் அறியாத நபர்களுக்கும் சுதந்திரத்தின் அருமையை உணர்த்துவோம்.. சுதந்திரம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடும் விசயமல்ல !..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
அதை உணர்ந்து செயல்படுவோம் தினம் தினம்.



 

Post Comment

6 comments:

  1. நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...
    http://varikudhirai.blogspot.com

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
  3. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.//
    சுதந்திரதின வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....