Tuesday, March 08, 2016

கனவுகள் (2)


நாம் விழித்திருக்கும் நேரங்களில் நம் உடலில் அடினோசின் எனும் வேதிச்சுரப்பு சுரந்து ரத்தத்தில் கலப்பதால் தான் நாம் அசதியாக உணர்கிறோம், இந்த அடினோசினாகப்பட்டது இதய துடிப்பின் வேகம், தசைகளின் இயக்கம், மூச்சு என சகலத்தையும் வேகம் குறைத்து தூக்கம் என்கிற உணர்வை தருகிறது. எவ்வளவு விழித்து இயங்குகிறோமோ அவ்வளவு அடினோசின், எவ்வளவோ அடினோசினோ அவ்வளவு தூக்கம். இயற்கையான போதை .

அதுசரி நம் உடல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் களைத்துப்போய் கவிழ்ந்திருக்கும் நேரத்தில் காட்சிப்பதிவுகளை ஓட்டி கனவுகளை ஏன் ஏற்படுத்த வேண்டும்.கனவுகள் இல்லாத உறக்கமே முழுமையான ஓய்வு என இந்திய சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கனவுகளுக்கு காரணங்கள் என்ன, கடந்த பதிவில் அறிவியல் உலகம் கூறும் காரணங்களில் சிலவற்றைப் பார்த்தோம். சிலர் கனவுகள் காரணத்தோடு நிகழ்கின்றன என்கிறார்கள், சிலர் அவை காரணமற்ற கண்டபடியான காட்சிப்பதிவுகள் என்கிறார்கள் , நம் வகையில் இரண்டு வகைக் கனவுகளும் இருக்கின்றன என நம்பி வைப்போம் :)

பொதுவாக நமக்கு வரும் அத்தனை கனவுகளையும் கீழ்காணும் நான்கு வகைகளாக கூறிவிடலாம்.

1 அர்த்தமற்ற கனவுகள்
2 அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் கனவுகள்
3 எதிர்காலம் பற்றிய கனவுகள்
4 நமக்கு மேலே உள்ள பிரபஞ்ச சக்தி நமக்கு ஏதேனும் அறிவிக்கும் கனவுகள்

அதுசரி, அர்த்தமற்ற கனவுகள் என்று ஒரு வகை சொல்கிறீரே !!
நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தங்கள் இருக்கின்றனவா.,
சிக்மன்ட் பிராய்ட்,கார்ல் ஜங்க் பொன்ற மனோ விஞ்ஞானிகள் துவங்கி நம்மூர் மரத்தடி ஜோசியர் வரைக்கும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், (அப்போதெல்லாம் இன்டர்நெட் பரிட்சயம் இல்லை) நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவந்து ஒரு பழைய நோட்டுப்புத்தகத்தில் இன்ன கனவுக்கு இன்ன அர்த்தம் என குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன் . இரண்டு ,மூன்று புத்தகங்களை Refer செய்திருப்பேன்.

கீழ்காணும் கனவு பலன்கள் ஒரு புத்தகத்தில் சிக்கியது...

திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.

கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.
இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.

கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.

வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.

உத்தரகாமிகாமகமஹாதந்திரம் என்கிற புத்தகத்தில் ஸ்வப்னாத்யாய விதி என்கிற படலத்தில் சில கனவு பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன அதில் மரணத்தை கனவில் காண்பது அசுபம் என்றும் மங்கல சின்னங்களை காண்பது சுபம் என்றும் எழுதியிருக்கிறார்கள்.,

பல்லிவிழும் பலன்கள் மாதிரி கனவுகளுக்கு பலன் கள் கூறும் அந்த புத்தகங்கள் ,ஒவ்வொன்றும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு விளக்கம் தரும். கடுப்பாகிப் போய் கனவுக்கு அர்த்தம் சொல்லும் பிராஜெக்டுக்கு பாதியிலேயே முற்றும் போட்டுவிட்டேன்.

Dreams are just Dreams , we project our own meanings into it என்கிறார் ஓஷோ, உண்மை தான்
நம் நமது புலன் உறுப்புகளின் உதவியோடு மனதிற்குள் சேகரித்த குப்பைகள் தான் கனவுகளாக தூக்கத்தின்போது அலையாடி விளையாடுகின்றன,
பிறவியிலிருந்தே பார்வையற்றவராக இருக்கும் ஒருவரின் கனவு சத்தங்களாகவும் ,வாசனைகளாகவும் மட்டுமே இருக்க முடியும், காட்சிகள் அதில் வருவதில்லை.

நாம் பார்த்த, கேட்ட அல்லது உணர்ந்த, விசயங்கள் தான் கனவில் வருகின்றன, அதேபோல கனவில் புதிய விசயங்கள் எதுவும் வருவதில்லை, என்கிறார்கள் விஞ்ஞானிகள்

நேற்று என் கனவில் நான் இதுவரை சந்தித்தே இராத ஒரு புதுப் பெண் என் Dream Girl வந்தாளே ! அது எப்படி என யோசிக்கிறபோது, சப்கான்சியஸாக, அல்லது அன்கான்சியஸாக உன் கண் உன்னையும் அறியாது கூட்டத்தில் இருந்த பெண் யாரையாவது மனதிற்குள் குறிப்பெடுத்திருக்கும், அந்த குறிப்பு தான் கனவின்போது கிளம்பி உன்னை Dream Girl ஐ தேடி அலைய கிளப்பி விடுகிறது என்கிறார்கள் கனவு விஞ்ஞானிகள் (oneirologists) .

Alright, அப்படியென்றால் கனவில் எதிர்காலம் வருவதெல்லாம் கப்ஸா என்கிறீர்களா !

பார்ப்போம்


கனவுகள் தொடரும் ... (3)

 

Post Comment

1 comment:

  1. கனவுகளைப் பற்றிய நல்ல அலசல்.
    கனவில் பிரேதத்தைப் பார்த்தால் நல்லது, கல்யாணத்தைப் பார்த்தால் கேட்டது என்பதெல்லாம் சகுனம் பார்ப்பது போலத்தான் என்று தோன்றுகிறது. சலவை செய்த துணிகள் வந்தால் கெட்ட சகுனம்; அழுக்குத்துணிகள் எடுத்துக்கொண்டு வந்தால் நல்ல சகுனம் என்பது போல. ஓஷோ சொல்வது சரி என்றே தோன்றுகிறது.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....