Saturday, March 26, 2016

கனவுகள் (4)

ஒரு பட்டாம்பூச்சியின் கனவு

னது சேகரித்து வைத்திருக்கும் குப்பைகளின் பலனாகவே பெறும்பாலும்  அன்றாடம் நாம் காணும் கனவுகள் தோன்றுகின்றன (கடந்த பதிவில் நாம் பார்த்த தெய்வீக கனவுகள் இதற்கு விதிவிலக்கு ). மனம் தனக்குள் குவிந்திருக்கும் குப்பைகளை Sleep mode  ல் கிடக்கும் போது கிளறுவதன் காரணமாகவே கனவுகள் ஏற்படுகின்றன. அவரவர் மனதிற்குள் எந்த ரக குப்பைகள் இருக்கிறதோ அந்த ரக கனவுகள் அவரவர்க்கு ஏற்படுகின்றன.

உதாரணமாக , பிறவியிலேயே கண்பார்வை இல்லாத நபரின் கனவுகளில் காட்சிகள் அறவே இருப்பதில்லை சத்தமும் , ஸ்பரிசமும், வாசனையுமாகவே அவர்கள் கனவு காண்கிறார்கள். அதேமாதிரி கருவிற்குள் இருக்கும் குழந்தை சத்தம் மற்றும் தொடுதல் உணர்வுகளாலான கனவுகளை காண்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கனவுகளற்ற தூக்கம் தான் நிம்மதியான ஆனந்தமயமான தூக்கம் என இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயூர்வேதம் சொல்கிறது. (எனக்கும் இது தான் சரி என படுகிறது )

மனதின் இரைச்சல்கள் இல்லாத , கனவுகளற்ற தூக்கம் !

சீன த்த்துவஞானி ‘ச்சுவாங்க் சௌ’ தனது கனவில் தன்னை ஒரு ‘பாடி பறந்து திரியும் பட்டாம்பூச்சியாக’ ஒருமுறை காண்கிறார், அதன் தாக்கத்தில் அவர் எழுதின கதை ஒன்றில் பின்வரும் விசயத்தை முன்வைக்கிறார்.

“நான் என்னை பட்டாம்பூச்சியாக கனவில் கண்ட போது நான் தான் ‘ச்சுவாங்க் சௌ ‘ என்கிற நினைவு எனக்கு துளி கூட இல்லை ,நான் திடீரென எழுந்து கொண்டேன், இப்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் தான் பட்டாம்பூச்சியை கனவில் சற்று நேரத்திற்கு முன் கண்டேனா ! இல்லை ஒரு பட்டாம்பூச்சி என்னை அதாவது இந்த மனிதனை தன் கனவில் கண்டு கொண்டு இருக்கிறதா ! ” .

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்த பரந்தாமனின் கனவு என வைஷ்னவத்தில் ஒரு கருத்து வருகிறது.
நாம் நிஜம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை, யாரோ ஒருத்தரின் கனவாக கற்பனை செய்து பார்க்கும் போது மனம் ஸ்தம்பித்து சில வினாடிகளாவது நின்று போய்விடுகிறது.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ என பாரதியார் புலம்புவது மாதிரி புலம்பலாம் போல இருக்கிறது.

விஞ்ஞானத்தை பேசி பேசி அலுத்துவிட்டது இந்த கட்டுரையில் இன்னும் கொஞ்சம் வேதாந்தம் பேசலாம் !

கனவுகள் தொடரும் ...



 

Post Comment

1 comment:

  1. பக்கம் திறக்க வெண்கு நேரம் எடுக்கிறது. indli நிரலை எடிட் டெம்ப்ளேட்டே HTML இல் கண்டறிந்து நீக்கவும். எனது டேஷ்போர்டில் இருந்து செல்லும் இணைப்பு ப்ளாக்கர் not found என்று வருகிறது. கனவுகள் தொடரட்டும்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....