இறைவி (விரிவான , short & simple விமர்சனம்)
இறைவி (படம் பார்க்கும் முன் சில எச்சரிக்கைகள்)
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த திரைப்படம் : பார்த்து முடித்த பிறகு உங்களை ......
சுத்த மொக்கை, இழுவை, ஒரு ------ ம் இல்லை போன்ற அனாயச திட்டல்களை உங்கள் திருவாயிலிருந்து உதிரச் செய்யலாம்.
அல்லது
ஆண் ஆதிக்க இனம், பெண் அடங்கின இனம் ., கனவர்கள் கொடுமைக்காரர்கள் , பெண்கள் தியாகிகள் , ஆண் என்பவன் துஷ்டன் , பெண் ஓர் இறைவி , போன்ற புரிதல்களை உங்களுக்குள் ஏற்றலாம்
அல்லது
பெண்களின் உணர்வுகளை பேசியிருக்கும் அற்புதமான திரைப்படம் என அங்கலாய்க்க வைக்கலாம்.
அல்லது
பெண்ணியம் பற்றிய வெளிப்படையான கருத்துக்களை பேசியிருக்கும் அதிமுக்கியத் திரைப்படம் (கொஞ்சம் அதிகமாகவே முக்கிவிட்டது ) , உலக திரைப்பட லெவல் என்றெல்லாம் யாரோ சொல்லிய விமர்சனங்களை கேட்டுவிட்டு படம் பார்க்க கிளம்பினால் நீங்கள் இந்த படத்தை நம்ம புரிஞ்சுக்க மெச்சுரிட்டி இல்லையோ என குழம்ப வைக்கலாம் .
அல்லது
அல்லது
உங்கள் அறிவுக்கும் , ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது பேஸ்புக்கிலோ, பிளாக்கிலோ எழுத வைக்கலாம்
அல் ரைட் ,
இவ்விடம் : நீயெல்லாம் திரைப்பட விமர்சனம் எழுதலைனு யார் கேட்டது என மைன்ட் வாய்ஸில் யாராவது திட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மன்னிக்க !! எழுதியே ஆக வேண்டுமென முடிவெடுத்து விட்டேன்.
விமர்சனம்:
--------------------------------------------
மூன்று பெண்கள் - வாழ்க்கையில் அவர்களின் லட்சியங்கள் -அவர்களுக்கு கிடைத்த கணவன்மார்கள் - அவர்களால் உடைந்துபோன அவர்களின் கனவுகள் - இது தான் இறைவியின் கதை
1. கதை, கதைக்களம், கதாப்பாத்திரங்கள்
படம் பார்த்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரம் சிக்கியிருக்கிறது. சில விமர்சக கத்துக்குட்டிகள் விமர்சனம் என்கிற பெயரில் படத்தின் கதையையெல்லாம் கூட சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
இவ்விடம் : நீயெல்லாம் திரைப்பட விமர்சனம் எழுதலைனு யார் கேட்டது என மைன்ட் வாய்ஸில் யாராவது திட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மன்னிக்க !! எழுதியே ஆக வேண்டுமென முடிவெடுத்து விட்டேன்.
விமர்சனம்:
--------------------------------------------
மூன்று பெண்கள் - வாழ்க்கையில் அவர்களின் லட்சியங்கள் -அவர்களுக்கு கிடைத்த கணவன்மார்கள் - அவர்களால் உடைந்துபோன அவர்களின் கனவுகள் - இது தான் இறைவியின் கதை
1. கதை, கதைக்களம், கதாப்பாத்திரங்கள்
- இது ஒரு multi protogonist ரக திரைப்படம் "ஹீரோ அல்லது ஹீரோயின் மைய " படம் அல்ல. இதனால் ஹீரோ மைய ( hero-centric ) ரசிக சிகாமணிகளுக்கு படம் சலிப்பூட்டும் வாய்ப்பிருக்கிறது.
- த்ரில்லர் + காமெடி + ரொமான்ஸ் + கருத்து என மிக்ஸ் ஜூஸ் அடித்திருக்கிறார்கள். ( Mixing சுவையை பாதிக்காமல் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் என தோன்றுகிறது) .
- படம் ஆரம்பிக்கும் போது "பாலச்சந்தர் , சுஜாதா, மற்றும் பாலுமகேந்திரா" ஆகியோருக்கு நன்றி சமர்ப்பிக்கப் படுகிறது. சந்தேகத்திற்கிடமின்றி திரைப்படத்தில் இம்மூன்று ஆளுமைகளின் படைப்புகளின் தாக்கமும் இருக்கிறது.
- நல்ல திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது கடினம் என்கிற பாலுமகேந்திரா அவர்களின் கருத்து திரைப்படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது., எஸ்.ஜே சூர்யா கேரக்டர் இதன் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கேரக்டரின் குணாதிசியங்களின் சித்தரிப்பில் நிறைய குறைகள் உள்ளன. முரண்பாடுகள் தென்படுகின்றன. பாலச்சந்தர் திரைப்படங்களின் வசன வீச்சு பின்பற்றப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா அவர்களின் "ஜன்னல் மலர்" நாவல் இத்திரைப்படத்திற்கான Partly inspiration ஆக இருந்திருக்கிறது.
- Partly inspired by சுஜாதாவின் "ஜன்னல் மலர்" நாவல் என டைட்டில் கார்ட் போட்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியமான Part டே அங்கிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது சொல்லியே ஆக வேண்டிய முக்கியத்தகவல். படத்தின் 7 முக்கிய கதாப்பாத்திரங்களுள் விஜய் சேதுபதி (மைக்கேல்), அஞ்சலி (பொன்னி) , பாபி சிம்ஹா (ஜகன்) கதாப்பாத்திரங்கள் ஜன்னல் மலரின் உபயம் , பாபி சிம்ஹா வின் திரைப்பெயர் ஜன்னல் மலர் நாவலில் பிரயோகிக்கப்பட்ட அதே பெயர் .
முக்கிய கதாப்பாத்திரங்கள்:
- எஸ்.ஜெ. சூர்யா - அருள்
- பாபி சிம்ஹா - ஜெகன்
- விஜய் சேதுபதி - மைக்கேல் (ராதரவி வீட்டு வேலையாளின் பையன்)
- அஞ்சலி - பொன்னி ( மைக்கேலின் மனைவி)
- கமாலினி முகர்ஜி - யாழினி (அருளின் மனைவி)
- பூஜா தேவரியா - மலர்விழி (மைக்கலின் காதலி)
- கருணாகரன் - ரமேஸ் (ஜகன் மற்றும் மைக்கேலின் நன்பன்)
- ராதா ரவி - அருள் மற்றும் ஜெகனின் அப்பா
- வடிவுக்கரசி - அருள் மற்றும் ஜெகனின் அம்மா
- கதைக்களம் : இது ஒரு Multilayered கதைக்களம் கொண்ட திரைப்படம், 2 layer கள் முக்கியமானவை 1) ஒரு சிற்பியின் குடும்பமும், அது சார்ந்த சூழலும்., இந்த plot ல் ராதாரவி, வடிவுக்கரசி SJ சூர்யா, கமாலினி பாபிசிம்ஹா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்கள் 2) அங்கு பணி புரியும் நபர் ஒருவரின் மகனின் வாழ்க்கை ( இந்த பகுதி முழுதும் சுஜாதாவின் ஜன்னல் மலரின் சாயல் ) விஜய் சேதுபதி, அஞ்சலி, பூஜா தேவ்ரியா முக்கிய கதாப்பாத்திரங்கள். இந்த இரண்டு plot களையும் இணைக்கும் கதாப்பாத்திரம் பாபி சிம்ஹாவாகிய ஜெகன்.
2.காட்சியமைப்புகள், திரைகதை,வசனம்
- திரைகதை : சொதப்பலான திரைகதையமைப்பு . திரைகதையில் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று வைக்கப்படிருந்தாலும் கூட திரைகதையில் நேர்த்தி (perfectness ) missing. தேவையற்ற காட்சிகள் ஒன்றிரண்டு இருக்கின்றன கத்தரி போட்டிருந்திருக்கலாம்.
- வசனம்: குறியீடு வசனங்கள் நிறைய வருகின்றன, க்ளைமேக்ஸில் எஸ்.ஜே சூர்யா பேசும் வசனம் hats off சொல்ல வைக்கிறது. அதேபோல திருமணமான அஞ்சலி (பொன்னி) கேரக்டரிடம் பாபிசிம்ஹா (ஜெகன்) ஐ லவ் யூ சொல்லும் போது.. "எனக்கு ஒரே ஒரு தடவ கல்யாணம் ஆச்சு, ஒரு கொழந்த இருக்கு ஆனா என்னை யாரும் லவ் பண்ணதில்ல நீதான் பர்ஸ்ட், ... யோசிச்சி சொல்றேன்" என அஞ்சலி கேரக்டர் பேசும் வசனம் சிலிர்க்க வைத்தது. வசனங்கள் படத்தின் ப்ளஸ்.
- காட்சியமைப்புகள்: அருமையான காட்சியமைப்புகள் .No Comments.
- ரசித்த காட்சிகள்: மலர் கேரக்டரில் வரும் பூஜா தேவரியா முகம் முழுக்க வண்ணங்கள் பூசியபடி படுக்கையில் கிடந்த காட்சி , ஜன்னலோரமாய் அஞ்சலி அமர்ந்திருந்த காட்சி, கமாலினி - சூர்யா காதல் காட்சிகள், மழை காட்சிகள் , போன்றவைகளை மிக ரசித்தேன் .
3. இசை:
இசை: பின்புலம் ( BGM) - அருமை , படத்தில் இடையிடையே இளையராஜாவின் இசை தூவப்பட்டிருக்கிறது !. இரண்டு,மூன்று இடங்களில் கதையோடு இழையோடும் மழைத்துளி சத்தம் அழகு .
பாடல்கள் : சொல்லத்துடிக்குது மனசு , மனிதி , காதல் கப்பல் போன்ற பாடல்கள் கதையோடு ஒன்றி இருக்கின்றன, இசையும் அருமையாக இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ஒன்னு ரெண்டு பாடல் வெறும் சத்த கூச்சல் (Audience Attraction pulling காக ), ஒத்தையிலே நிக்கிறேன்டி.. என்ற ஜெயில் பாடல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் ஏ.ஆர் ரஹ்மானின் "ஜெயிலே ஜெயிலே சென்ட்ரல் ஜெயிலே .. " இசை தழுவல் போல ஒலிக்கிறது.
பின்குறிப்பு: இந்த படம் பெண்கள் பற்றின படம்னு, பெண்ணியம் பேசும் படம்னு நிறைய பேர் சொல்றாங்க , எனக்கு அப்படி எந்த வெளக்கெண்ணயும் தோணல. டைட்டிலுக்கு கீழே சில WOmen களின் கதைனு சப்டைட்டில் ஒன்னு வச்சிருக்காரு டைரக்டரு இதுவும் கூட குறியீடு தான் னு நெனக்கிறேன். மத்தபடி எல்லா WOmen களும், MEN களும், WOMEN களும் பார்க்கவேண்டிய படம் தான்.
பாடல்கள் : சொல்லத்துடிக்குது மனசு , மனிதி , காதல் கப்பல் போன்ற பாடல்கள் கதையோடு ஒன்றி இருக்கின்றன, இசையும் அருமையாக இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ஒன்னு ரெண்டு பாடல் வெறும் சத்த கூச்சல் (Audience Attraction pulling காக ), ஒத்தையிலே நிக்கிறேன்டி.. என்ற ஜெயில் பாடல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் ஏ.ஆர் ரஹ்மானின் "ஜெயிலே ஜெயிலே சென்ட்ரல் ஜெயிலே .. " இசை தழுவல் போல ஒலிக்கிறது.
4. மதிப்பெண்
( + ) கதை, காட்சியமைப்பு,வசனம், BGM, கருத்து, கதாப்பாத்திரங்களின் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு,.
( - ) சொல்லப்பட்டிருக்கும் விதம், திணிக்கப்பட்டிருக்கும் கருத்து, திரைகதை நேர்த்தி, தேவையற்ற காட்சிகள் (Scenes).
கடற்கரை மதிப்பெண் : 10 க்கு 5
5. ஒன் லைன் விமர்சனம்
- இறைவி:- குறியீடு
பின்குறிப்பு: இந்த படம் பெண்கள் பற்றின படம்னு, பெண்ணியம் பேசும் படம்னு நிறைய பேர் சொல்றாங்க , எனக்கு அப்படி எந்த வெளக்கெண்ணயும் தோணல. டைட்டிலுக்கு கீழே சில WOmen களின் கதைனு சப்டைட்டில் ஒன்னு வச்சிருக்காரு டைரக்டரு இதுவும் கூட குறியீடு தான் னு நெனக்கிறேன். மத்தபடி எல்லா WOmen களும், MEN களும், WOMEN களும் பார்க்கவேண்டிய படம் தான்.
Labels: iraivi review, இறைவி திரை விமர்சனம், திரைவிமர்சனம், விமர்சனம்
1 Comments:
https://www.facebook.com/anniyantou/
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home