Monday, March 27, 2017

பாரதிச்சூடி-3

இளைத்தல் இகழ்ச்சி:

 பாரதி குறிப்பிடும் இளைத்தல் என்பதை உடல் இளைத்தல் என்பதாக மட்டுமல்லாது  பின்னடைதல், சோர்வடைதல் என்கிற  அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும்,  பின்னடைதல் ,சோர்ந்து ஓய்தல்  இகழ்ச்சி.

அறிவு,ஆற்றல், மனஉறுதி, செயல்பாடு,சிந்தனை ஆகிய வாழ்வின் எல்லா படிகளுக்கும் இந்த இளைத்தல் இகழ்ச்சி பொறுந்தும்.

இருக்கும் நிலையினின்று முன்னேற வேண்டும், அதுவிடுத்து இருப்பினும் தாழ்தல் இகழ்ச்சி என்கிறான் பாரதி.

அவ்வை ஏற்பது இகழ்ச்சி அதாவது  இரந்து(பிச்சையெடுத்து) வாழ்தலை இகழ்ச்சி என்கிறாள், பாரதி வாழ்நிலை யில் தாழ்ந்து இறங்கி வாழ்தலை (இளைத்தலை) இகழ்ச்சி என்கிறான்.

ஆண்மை தவறாதிருக்க அச்சம் தவிர்க்க வேண்டும், ஆண்மை தவறினால் இளைத்தல் ஏற்படும் , இளைத்தல் இகழ்ச்சி. ஆண்மை தவறேலை emphasize செய்கிறது.

தேங்கும் நதி சாக்கடையாகும், ஓடும் நதியே கடலைச்சேரும்.இகழ்ச்சி என்பது அவமானம் ,மானக்கேடு, கேலி, இழிவு , அவச்சொல் போன்றவற்றினை பெறும் நிலை. இருக்கும் நிலையினின்று இறங்குதல் மாபிழை ! அது இகழ்ச்சி தரும் இழி நிலை!


3 Comments:

At Mon Mar 27, 09:15:00 pm , Blogger Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இருக்கும் நிலையிலிருந்து இறங்கல் பிழையே

 
At Mon Mar 27, 11:16:00 pm , Blogger KANIMOZHI D said...

அருவி போல் விழுந்து கொண்டே இரு..
காட்டாறு போல் ஓடி கொண்டே இரு...
நதி போல் தவழ்ந்து கொண்டே இரு...தேங்கி மட்டும் நின்று விடாதே சாக்கடையாகி விடுவாய்...(அருமையான கருத்து)....
----துரு பிடிக்காமல் இருந்திடுவோம்----

 
At Tue Mar 28, 09:27:00 am , Blogger அபயாஅருணா said...

முற்றிலும் சரி .அறிவு பணம் கௌரவம் பகுத்து அறியும் திறன் என எல்லாவற்றிலும் இளைத்தல் இகழ்வே

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home