Friday, March 24, 2017

பாரதிச்சூடி

பாரதிச்சூடி:

காப்பு:

பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


காப்பு விளக்கம்: ( விளக்கம் எழுதத்துணியும் என்னை பாரதி மன்னிப்பானாக)

-------------------------------------------------------------------------------------------------

பிறை நிலா சூடி மோன நிலையில் தியானித்திருக்கும் சாம்பல் மேனியான் (சிவன்)

பாற்கடலில் படுத்திருக்கும் கருனிறத்தான்(திருமால்)

மகமது நபிக்கு வேதம் உரைத்தவன் (அல்லா)

ஏசுவின் தந்தை (பரமபிதா)

மதங்கள் பலவொடு உருவகம் பலவென (பலரால் )உணரப்படாத,பலவென பரவிடும் பரம் பொருள்  ஒன்றே !

அதன் இயல்பு சுடர்மிகு அறிவு !
அந்த நிலை கண்டவர்கள் அல்லல் அகற்றினர்.(தம் அல்லலையும்,பிறர் அல்லலையும்)

அதன் அருளை வாழ்த்தி அழியா வாழ்வினை அடைவோம் !

-----------------------------------------------------------------------------------------------------

: ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாய் , ஒவ்வொரு பெயரில் ஒன்றென அறியாது, ஒன்றென உணராது வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒன்றே! சுடர்மிகு அறிவே அதன் இயல்பு, இறை இயல்பாம் அவ்வறிவை அறிந்தவர்க்கு அல்லல் இல்லை ! அந்த இறையின் அருளை வாழ்த்தி அழிவிலா அமர வாழ்வு அடைவோம்.

 

Post Comment

1 comment:

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....