Monday, March 07, 2016

கனவுகள் (1)

.

மீபத்தில் எனக்கொரு கனவு வந்தது ... , இது போன்றதொரு கனவு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது, அதற்கு பின் இப்போது தான்.

நாம் உறங்கும் இடமும் நமது கனவுகளை பாதிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று என படித்தாக நியாபகம்., நைட் ஷிஃப்ட் -ல் நான் வழக்கமாக தூங்கும் இடத்தை மாற்றியது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.  கடந்த முறை இதேபோன்ற கனவு சென்னையில் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த நாளொன்றின் உண்டு மயங்கிய மதியத்தில் நன்பரொருவரின் அறையில் தட்டியது.  வினோதமான கனவுகள் !

கனவுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறேன், அங்கே ஒரு கனவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு கட்டத்தில் புறக்காரணி ஒன்று நிஜ உலகில் என்னை உறக்கத்திலிருந்து எழுப்புகிறது , சென்னைக் காலத்தில் பூட்டியிருந்த  அறைக்கதவு தட்டப்பட்டது., நேற்றைய கனவில் எங்கள் ஹோட்டல் செக்யூரிட்டி எழுப்புகிறார்.

நிஜ உலகில் நான் இன்னமும் துயிலில் தான் கிடக்கிறேன் .  இரண்டு சம்பவங்களின் போதும் இதே கதை தான்.

கனவு சம்பவம் - 1 

இடம்: நன்பரின் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிவிட்ட புறக்காரணி : கதவு தட்டும் சத்தம்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன், கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த கனவு களைந்துவிடுகிறது, தட்டப்பட்ட கதவை எழுந்து சென்று திறந்து விடுவது மாதிரியும்  சீக்கிரம் திறக்க மாட்டியா என என்னைத் திட்டியபடி  நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சாய்வது மாதிரியும் ,  திறந்த அந்த கதவை நான் மறுபடியும் சார்த்திவிட்டு அறைக்குள் வந்து மீண்டும் தூங்குவது மாதிரியும் கனவில் காட்சிகள் built up செய்யப்படுகின்றது. ,

ஆனால் நிஜத்தில் நான் எழுந்திருக்கவே இல்லை. திரும்பவும் கதவு தட்டப்படும் சத்தம் திரும்பவும் திறக்கிறேன், திரும்பவும் சத்தம் , சத்தம், சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கதவு திறந்தும் எப்படி சத்தம் மட்டும், தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல... சிலிர்ப்பியதில் நிஜ உலகிலிற்குள் எழுந்து கொள்கிறேன், நிஜ உலகில் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. போய் திறந்து விட்டேன். எவ்வளவு நேரமா தட்டிட்டே இருக்கேன் ... திட்டியபடியே நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சரிகிறான், நானும் .

கனவு சம்பவம்-2 

இடம்: ஜெனரேட்டர் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிய புறக்காரணி : செக்யூரிட்டியின் குரல்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன்,  , காலை ஆகிவிட்டது  விடிந்துவிட்டது என்ற காரணத்தால் தான் அவர் எழுப்பி இருக்கிறார் , கனவின் உள்ளே இருந்த உறக்கத்திலிருந்து நான் எழும்பி அன்றைய பணிகளை செய்ய ஆரம்பிக்கிறேன், தண்ணீர் ஏற்றும் மோட்டாரைப் போடுகிறேன் தண்ணீர் சிந்தி என் மேல் சிதற நான் நிஜ உலகிற்குள் பிரவேசிக்கிறேன், " என்னப்பா நல்ல தூக்கமா !"  "ம்.." கண்ணைக்கசக்கிக்கொண்டு எழுந்திரித்து மோட்டார் போட செல்கிறேன். தண்ணீர் தெளிக்கிறது.

 எனது இந்த கனவுகளின் பின்னாலான அறிவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை ,தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சரி, கனவுகள் பற்றி கொஞ்சம் உருப்படியாக எதாவது பேசலாம்.

 கனவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ...

கனவுகள் பற்றி பேச்சை ஆரம்பிக்கலாம் என யோசிக்கையில் மனதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஓடுகின்றன.

அறிவியல் , ஆன்மீகம், தத்துவார்த்தம் என ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் கனவுக்கான Chapter கள்  இருக்கின்றன. கனவுகள் ஏன் வருகின்றன, அவற்றின் காரணம் என்ன, அவற்றின் அர்த்தங்கள் என்ன? , கெட்ட கனவுகள் எதனால் வருகின்றன? ,  கனவுகள் எதிர்காலத்தை சொல்லுமா ? , வித்தியாசமான கனவுகள், கனவுகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம் :)

கனவுகள் எதனால் வருகின்றன !

ஆழ்மனதின் ஆழத்தில் பதிந்துபோன உணர்வுகள் மற்றும் ஆசைகளே கனவுகளாக எழுகின்றன என்கிறார் நவீன மனோவியலின் தந்தை என அழைக்கப்படும் சிக்மன்ட் பிராய்ட். அதுமட்டுமின்றி அவர் தனது Interpretations of Dreams புத்தகத்தில் கனவுகள் எதுவாயினும் அதற்கு Sexual Motive ஒன்று  கட்டாயம் இருக்கும் என்கிறார்.

கார்ல் ஜங்க் என்ற சைக்காலஜிஸ்ட் கனவுகள் என்பவை stress எனப்படும் மன உலைச்சலில்  லிருந்து  விடுபெற நிகழ்கின்றன என்கிறார், ஏழை ஒருவன் செல்வந்தனாக இருப்பபது போல் கனவு காண்பது , நமக்கு வேண்டாத அந்த நபர் செத்துப்போவது போல காண்பது, அலுவலகம் வெள்ள நீருக்குள் மூழ்கிப்போவது  போன்றவை இவ்வகை தான் என்கிறார்.

கனவுகள் ஆராய்ச்சியை பொறுத்தவரை விஞ்ஞானம் கத்துக்குட்டி நிலையில் தான் இருக்கிறது என தோன்றுகிறது. காலத்திற்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஆராய்ச்சி முடிவை சொல்லிக்கொண்டு, சகட்டுமேனிக்கு Theory களை சொல்லிக்கொண்டு திரிகிறது.  ஒரு சின்ன  Sample !

ஆரம்பத்தில் கனவுகள் REM எனப்படும் தூக்கத்தின் முதல் நிலையில் தான் வருகின்றன, மற்ற நிலைகளில் வருவதில்லை என்றது,

Rapid Eye Movement அதாவது "அதிவிரைவு கண் அசைவு " என்பதன் சுருக்கமே REM , உறங்கிகொண்டிருப்பவரின் மூடிய கண்கள் இமைகளுக்கு உள்ளாக அங்குமிங்குமாக அசையுமே அது தான் REM.

பின் REM - ல் கனவுகள் அதிகம் வருகின்றன., மற்றவைகளில் கம்மி என்றது .இப்போது , REM உறக்கத்தில் தூக்கமும் விழிப்பும் இருப்பதால் கனவுகள் நினைவில் இருக்கின்றன, மற்றவற்றில் ஆழ்நிலை உறக்கநிலைக்கு சென்று விடுவதால் கனவுகள் நினைவில் இருப்பதில்லை என்கிறது.

ஆழ்ந்த உறக்கம் இல்லாதபோது விழிப்பும் தூக்கமும் கலந்த நிலையில் இருப்போம் ,அப்போது நமக்கு வரும் கனவுகள் நியபகமாக இருக்கும், கனவுகள்  சில இடங்களில் படுக்கும் போது அதிகமாக இருக்க இதுதான் காரணமாம்  (எல்லா கனவுகளும் நியாபகம் இருக்கும்).

இன்னும்  என்னவெல்லாம் சொல்கிறார்கள் !

1) கனவுகள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளை அனெய்ரோலாஜி ( oneirology ) என்கிறார்கள், கனவுகளின் போது உடல் செயல் நடவடிக்கைகள், உள்ளுருப்புகளின் செயல்கள், மூளைச் செயல்பாடுகள், மூளை வெளியிடும் அலைகள் போன்ற இத்யாதிகளை ஆராய்கிறார்கள். கனவுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள்  இதில் இல்லை அது தனி டிபார்ட்மென்ட்- ல் வருகிறது :) . கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன , அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறார்கள் oneirologist கள். !

2) நமது உடலின்  புலன்கள் sleep mode ற்கு மாறும்போது, மூளை semi sleep mode ல் உடல் உயிருடன் இருப்பதற்கான அத்தியாவசிய இயக்கங்களான மூச்சு, இதயத்துடிப்பு, போன்ற இத்யாதிகளை கவனித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அது தன்னையும் , நியூரோ டிரான்ஸ்மிட்டர்களையும். (தகவலை கடத்தும் நரம்புகள்)  Refresh செய்துகொள்கிறது  இதை synaptic Efficacy Refreshment என்கிறார்கள்.அநேகமாக இது REM உறக்கத்தில்தான் நிகழ்கிறதாம். அப்போது மூளைக்குள்  குறைந்த அதிர்வெண்ணில் (14 Hz, என்கிற அளவில்) அதிர்வலைகள் எழுகின்றன, இந்த இயக்கத்தின் பலனாகவே  அதாவது மூளை தான் கண்ட ,கேட்ட, உணர்ந்த காட்சிகளை எல்லாம் consolidate செய்து தன்னை refresh செய்து கொள்வதால் தான் கனவுகள் எழுகின்றன என்கிறார்கள். 

4) நாம் தூங்கும் போது மூளை நரம்புகளுக்குள் நிகழ்கிற குருட்டாம்போக்கான சிக்னல் பரிவர்த்தனைகள் காரணமாகவே கனவுகள் நிகழ்கின்றன என்கிறார்கள்.


5) கனவுகளுக்கு அர்த்தம் சொல்வது, கனவுகள் எதிர்காலத்தை சொல்வது, கனவுகள் பல சிக்கல்களுக்கு விடை சொல்வது போன்றவைகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்லவில்லை. 

கனவுகளுக்கு விஞ்ஞானிகள் கண்டபடி காரணம் சொல்கிறார்கள், ஆனால் இன்று வரை அது ஒரு புதிராகவே நிலைத்து நிற்கிறது...

கனவுகள் தொடரும் ....

 

Post Comment

2 comments:

  1. இன்செப்சன் படம் பாரு டா... அதிலும் இப்படித்தான் கனவுக்குள் கனவு என்று கனவு வேட்டை நிகழும்...

    அட்டகாசமான படம்...

    எனக்கும் சில கனவுகள் இதே போன்று வந்திருக்கின்றன... நிறைய எழுது...

    ReplyDelete
  2. நான் கனவுகள் இல்லாமல் தூங்கியதே இல்லை. பகல் தூக்கதில் கூட கனவு வரும். பலசமயங்களில் நான் படிகளில் இருந்து கீழே இறங்க முயற்சிப்பதாகவும் அது முடியாமல் போவதாகவும் கனவு வரும்! இதற்கு என்ன பலன் என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.
    கனவுகளின் பலன்கள் பற்றி அறிய பலருக்கும் ஆவல் இருக்கிறது. நானும் கனவுகளின் பலன்கள் பற்றி எழுதியிருக்கிறேன். தொடர்ந்து படிக்கிறேன், விஜயன். நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....