Friday, November 30, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -பாகம்-12



கணினி வரலாறு -பாகம்-2

கடந்த பதிவில் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் கணினியின் முன்னோர்களான அபாகஸ்,நேப்பியர் கட்டைகள்,நழுவு அளவி,கணக்கிடும் கடிகாரம்,மற்றும் பாஸ்கலின் ஆகிய கருவிகளை பற்றி பார்த்தோம்...

கணினியின் முன்னோடிகளான இந்த கணக்கிடும் கருவிகளில் கணினியின் சுவடு சிறிது கூட இல்லாமல் இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது..,இருப்பினும் கணினிக்கு அச்சாரமிட்ட இந்த முற்கால கணக்கிடும் கருவிகளுக்கு இக்கால கணிப்பொறிகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவை இல்லை என்றால் இவை இல்லை :)

பாஸ்கலினுக்கு அடுத்து வந்த கணக்கிடும் கருவிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்...
அதற்கு முன் இரு முக்கியமான விசயங்கள்:

விசயம்:1
கணக்கிடும் கருவிகளை இரு வகையாக பிரிக்கலாம் (இந்த பிரிவுகள் நானாக செய்தவை ,புத்தகங்களில் இல்லை) கணினிக்கு முன் வந்த கருவிகளை புரிந்து கொள்ள இந்த பிரிவுகள் அவசியம்.

1.கணக்கிடும் கருவிகள் (இவை நாம் தரும் கணக்குகளை செய்து விடை சொல்லும். எடுத்துக்காட்டாக : பாஸ்கலின்).

2.கணக்கிட பயன்படும் துணைக்கருவிகள் (இவைகளின் உதவியுடன் கணக்கு செய்வது சுலபம் ஆனால் விடையை நாம் தான் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக : அபாகஸ்,நேப்பியர் கட்டைகள்,நழுவு அளவி).

இந்த இரண்டு பிரிவுகளின் படி நீங்கள் கருவிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

விசயம்:2

 கணினிக்கு முன்னோடியான கருவிகள் பற்றி ஆராயும் போது நிறைய கருவிகள் தட்டுப்படுகின்றன.,அவை அத்தனையையும் பற்றி நாம் பார்க்க முயன்றால் இந்த தொடரின் பயணம் பல வருடங்கள் கூட நீளும் என்பதால் கணினிக்கு வித்திட்ட முக்கிய கருவிகள் பற்றி மட்டும் பார்ப்போம்.(மேலதிக தகவல் வேண்டுவோர் கமென்ட் ,அல்லது மெயில் செய்யுங்கள்.)

இத்தாலி நாட்டில் 1650 ல் ஆட்சி செய்த Ferdinando II மன்னர் தன் அரண்மனையில் புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதில் ஆர்வம் கொண்டவர், அவர் தொலைநோக்கிகள்,தெர்மாமீட்டர்,ஹைக்ரோமீட்டர்(hygrometer- காற்றின் ஈரப்பதம் அறியும் கருவி),பாரோமீட்டர் (Barometer-அழுத்தமானி) போன்ற கருவிகளை வைத்திருந்தார்,அந்த கருவிகளை கண்டுபிடிக்கும் அறிஞர்களை கௌரவம் செய்தார்.
பாஸ்கலின் கருவி கண்டுபிக்கப்பட்ட சிலபல வருடங்களுக்கு பிறகு
Tito Livio Burattini என்ற இத்தாலிய அறிஞர் (கட்டட பொறியியல்,வானவியல்,கணிதம்,எந்திரவியல் அறிஞர்).பிரான்ஸ் நாட்டிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயன்பாட்டில் இருந்த பாஸ்கலின் கருவி பற்றி கேள்விப்பட்டு அதைப்போலவே ஒரு கணக்கிடும் கருவியை செய்து Ferdinando II மன்னரிடம் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருவியை கண்டுபிடித்தார். இதன் பெயர் : Ciclografo. ஹாலிவுட் படங்களை தமிழ் டைரக்டர்கள் தமிழ் பெயரில் ரீமேக் செய்வது மாதிரி இவர் புது வடிவில் பாஸ்கலின் கருவியை ரீமேக் செய்திருந்தார்.

.


Tito Livio Burattini-ன் கணக்கிடும் கருவி 1659 (© Istituto e Museo di Storia della Scienza அருங்காட்சியகம்) இடம் :Florence, Italy



சாமுவேல் மொர்லான்ட் -ன் கணக்கிடும் கருவிகள்:




                         சாமுவேல் மூர்லான்ட்

 Sir Samuel Morland ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் .இவர் கணக்குகளை எளிய முறையில் செய்ய மூன்று கருவிகளை கண்டுபிடித்தார்.

1
கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1666)
2
பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகள் செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1662)
3
(முக்கோணவியல்)Trignometry கணக்குகள் செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1663)


 1673 ம் வருடம் இவர் "The description and use of two arithmetick instruments" என்ற தனது நூலில் இந்த கருவிகளை பற்றி விளக்கியுள்ளார்.கணிதவியல் கருவிகளை பற்றி விளக்கமாக எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவே !.



  மூர்லான்ட்-ன் "The description and use of two arithmetick instruments "

கருவி:1 கூட்டல்-கழித்தல் எந்திரம்:

 இந்த கருவி தான் உலகின் முதல் பாக்கெட் கால்குலேட்டர்,இதற்கு முன் வந்த பாஸ்கலின் கருவி மற்றும் Ciglografo போன்ற கருவிகளை விட சிறிய வடிவில் இதை மோர்லான்ட் வடிவமைத்தார்.(மோர்லான்ட் ஒரு சிறந்த கடிகாரம் செய்யும் வல்லுனர் என்பது குறிப்பிட்த்தக்கது)
இதன் அளவு : க்கு இன்ச் கால் இன்சுக்கும் குறைவான தடிமன் (120 x 70 x 8 mm)
 இக்கருவி வெள்ளி மற்றும் வென்கலத்தால் செய்யப்படிருந்தது.இக்கருவியில் உள்ள டயல்களை சுற்ற ஒரு குச்சி (Stylus) கொடுக்கப்பட்டது !.இந்த டயல்களை கடிகார சுழல் திசையில் (Clock-wise )சுற்றி கூட்டல் கணக்குகளையும்,எதிர் திசையில்(Anti clock-wise)சுற்றி கழித்தல் கணக்குகளையும் செய்ய முடிந்தது!


                 உலகின் முதல் பாக்கெட் கால்குலேட்டர்
கருவி:2 பெருக்கல் கருவி:

 மோர்லான்ட் -ன் இரண்டாவது கருவி பெருக்கல் கருவி ,இது நேப்பியர் கட்டைகள் அடிப்படையில் இயங்கியது.மோர்லான்ட் இந்த கருவிக்கு Cyclologica  என்று பெயரிட்டு தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.இக்கருவியை நேப்பியர் கட்டைகளின் எளிய வடிவம் என்று சொல்லலாம்.
இதன் அளவு: 18 x 55.5 cm.
இக்கருவி:வெள்ளி,வென்கலம்,மரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டது.


      பெருக்கல் கருவி (© Istituto e Museo di Storia della Scienza, Florence)




The description and use of two arithmetick instruments புத்தகத்திலிருந்து பெருக்கல் கருவி பற்றிய பக்கம் (© United States Library of Congress)

கருவி:3:முக்கோணவியல் கருவி




 இக்கருவியின் உதவியுடன் முக்கோணவியல் கணக்குகளை  செய்ய முடிந்தது.இக்கருவியில் உள்ள அளவிகள் உதவியுடன் எந்த வித முக்கோணத்தை வேண்டுமானாலும் பேனா பேப்பர் உதவி இல்லாமல் அமைத்து கணக்கீடுகள் செய்ய முடிந்தது.சாமுவேல் இக்கருவிக்கு Maccina Cyclologica Trigonometrica என்று பெயரிட்டிருந்தார்,இந்த கருவி பற்றியும் இவர் தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

 சாமுவேலின் கருவிகள் நடைமுறையில் பெரிய அளவில் பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இவரின் கருவிகள் பற்றி இவரது ஆசிரியர் Samuel Pepys (formerly Morland's tutee at Cambridge) கீழ்கண்டவாறு கூறுகிறார்:

 Samuel pepys -ன் 1667-6 வருட டயரிக்குறிப்பு
" the machine of Morland is very pretty, but not very useful  "

"மூர்லான்ட்-ன் கருவிகள் அழகாக உள்ளன ,ஆனால் அவற்றால் பெரிய அளவில் பயனில்லை."

விஞ்ஞானி ராபர்ட் ஹூக் (Robert Hooke அவரது டயரியில் 31 january, 1673 :தேதியிட்டு 
" Saw Sir S. Morland's Arithmetic engine Very Silly"

"சாமுவேல் மூர்லான்ட்-ன் கருவி சிறுபிள்ளை தனமாக உள்ளது."

என்று குறிப்பிட்டுள்ளார்.

சாமுவேல் மூர்லான்டின் கருவிகள் நடைமுறையில் பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் உலகின் முதல் சிறிய கணக்கிடும் கருவிகள் என்ற பெருமைக்கு உரியவை...!

அடுத்த பதிவில் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்த உலகின் முதல் கால்குலேட்டர் பற்றி பார்க்கலாம்
அடுத்த பதிவிலும் கணினி வரலாறு தொடரும்......
 
வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.



 

Post Comment

8 comments:

  1. அறியாத்தகவலை படத்துடன் விளக்கியதற்கு நன்றி....

    ReplyDelete
  2. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  3. ஆச்சரியமான மாய உலகத்தில் தெரிந்து கொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது, விஜயன்!
    தொடரட்டும் உங்கள் அரும் பனி!
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. reply @ தொழிற்களம் குழு, திண்டுக்கல் தனபாலன்
    மிக்க நன்றி தொடர் ஆதரவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆச்சர்யம் நிறைந்த மாய உலகிற்காக தாங்கள் தகவல் திரட்டும் திறமைகண்டு ஆச்சர்யம் அடைகிறேன்! அருமை நண்பரே!

    ReplyDelete
  6. முன்னர் வெளியான பதிவுகளையும் படித்தால் தான் புரியும் .. படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  7. பதிவுலகின் அடுத்த வரலாறு சுவடுகள் நீங்கள் தான் என நினைக்கிறேன் தொடருங்கள்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....