Tuesday, October 02, 2012

மகான் ! காந்தி மகான் !



காந்தி மகானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ன்று தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள். அவரை சிலருக்கு பிடிக்கும் ,சிலருக்கு பிடிக்காது.அவர் நல்லவரா? கெட்டவரா? என்று என் நன்பர்கள் பலருடன் நான் விவாதித்திருக்கிறேன் 
அவர் நல்லவரா ? கெட்டவரா ? என்று எனக்கு தெரியாது....
ஆனால் அவர் நிச்சயம் மகாத்மா என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

அவரை பற்றிய சில தகவல்களை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.இத்தொகுப்பு ஆனந்த விகடன் வெளியிட்டது.,இன்று இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


மகாத்மா காந்தி - 25


  • காந்திஅரிச்சந்திரனின் ரசிகர்சத்திய சோதனையாளர்அரையாடைப் பக்கிரிஅகிம்சைப் போராளி!
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார்மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார்காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!
  • காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறைகுடியரசு தினம்சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!
  •     முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
  •     காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்திஇந்திதமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!
  •     தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!
  •     `உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்திலண்டனில் சட்டம் பயிலும்போதுஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!
  •     காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான்அனால்அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோதுபிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்திஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோதுஅவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்அதில் ஒருவர்இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!
  •     வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதுகாந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’
  •     கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம்மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம்பண்பு இல்லாத அறிவுநியாயம் இல்லாத வணிகம்மனிதம் மறந்த அறிவியல்தியாகம் இல்லாத வழிபாடு’இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
  •     தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!
  •     கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்காரணம்கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’
  •     யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!
  •     கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார்எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும்உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார்அதை அவரும் கடைப்பிடித்தார்!
  •     ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார்அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.
  •     `சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோதுஅதற்கு காந்திதன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!
  •     எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லைஅவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.
  •     தான் தவறு செய்தால்அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால்அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார்இந்த குணம்அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
  •     ஆரம்ப காலங்களில்ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார்விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.
  •     இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமாஅவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அதுஇது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.
  •     ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம்மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.
  •  `என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.
  •     மார்டின் லூதர்கிங்தலாய் லாமாஆங் சான் சூகிநெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம்காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால்காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.
  •     இந்தியா சுகந்திரம் அடைந்தபோதுஅதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர்ஒருவர் காந்திஇன்னொருவர் தந்தை பெரியார்!.
  •     போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டுகுஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.
  •     `கனவில் இருந்து நிஜத்துக்குஇருளில் இருந்து வெளிச்சத்துக்குமரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!.

பிதாவே! உமக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

 

Post Comment

2 comments:

  1. சிறப்பு பகிர்வு...

    ஏற்கனவே படித்திருந்தாலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. காந்தி பற்றி அனைவரும் சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....